headlines

img

ஓராண்டுப் போர்

உக்ரைன் போர் துவங்கி இன்றுடன் (பிப்.24) ஓராண்டு முடிகிறது. ஆயினும் போர் முடிவதாக இல்லை. மாறாக, போரை மேலும் மேலும் நீட்டிப் பதற்கே, இப்போர் நடந்து கொண்டிருப்பதற்கு காரணமான அமெரிக்க ஏகாதிபத்தியம் விரும்பு கிறது; எரிகிற தீயில் எண்ணெய்யை இடைவிடா மல் வார்த்துக் கொண்டிருக்கிறது. 

போர் என்பது போர்தான். போர் என்பது பெரும் அழிவுதான். போரை நாம் ஒருபோதும் விரும்ப வில்லை. ஆதரிக்கவில்லை. அமெரிக்க மற்றும் உக்ரைன் தரப்பில் ஆத்திரமூட்டல் இருந்தாலும், போரை உடனடியாக ரஷ்யா முடிவுக்கு கொண்டு  வரவேண்டும். உலகம் முழுவதிலும் இத்தகைய எதிர் பார்ப்பும், வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டா லும், ரஷ்யாவே முன் வந்தாலும் போரை முடிப்ப தில்லை என்று கங்கணம் கட்டிச் செயல்படுகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். 

ஓராண்டு நிறைவடைவதையொட்டி கடந்த திங்களன்று உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டி ருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன். அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியையும், ராணுவ அதிகாரிகளையும் சந்தித்த அவர், ரஷ்யா வுடனான போரைத் தொடர்ந்து உறுதியாக மேற் கொள்வோம் என்றும், அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்குவோம் என்றும் உறுதியளித்திருக்கிறார். 

இந்தப்போர் உக்ரைனில் நடக்கிறது என்றா லும், இது உண்மையில் ரஷ்யாவுக்கும் அமெரிக்கா வுக்கும் இடையிலான போரே. ரஷ்யாவை ராணுவ ரீதியாக சுற்றி வளைப்பதற்காக வடக்கு அட்லாண் டிக் ராணுவ கூட்டணியை (நேட்டோ) மேலும் மேலும் விரிவுபடுத்துவது, உக்ரைனையும் அதில் இணை த்துக் கொள்வது என்ற அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் அட்டூழிய நடவடிக்கை தான் இந்தப்  போருக்கான அடிப்படைக் காரணம். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் அவரது அரசும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளா கவும், அதன் ராணுவ சூழ்ச்சித் திட்டங்களை நிறை வேற்றுபவர்களாகவும் இருக்கிறார்களே தவிர, ஒருபோதும் உக்ரைனில் போரின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களைப் பற்றி சற்றும் எண்ணிப் பார்க்கவில்லை. 

அளவற்ற பணத்தையும், ஆயுதங்களையும் இடைவிடாமல் கொட்டிக் கொடுக்கிறது அமெ ரிக்கா. பைடன் தனது பயணத்தின் போதும் தொடர்ச்சியான நிதி மற்றும் ஆயுத உதவிக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறார். 

ஆனால் இந்தப் போரால் ரஷ்யா கடுமையாக பாதிக்கப்படும் என்றும், அதன் வளங்களும் பொரு ளாதாரமும் நிலைகுலையும் என்றும் அமெரிக்கா கணக்குப் போட்டது. ஆனால் உண்மையில் நிலைமை தலைகீழாக உள்ளது. அமெரிக்காவின் கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகள் ஒருபக்கம் அமெரிக்காவுக்கு தலையாட்டிக் கொண்டே ரஷ்யாவுக்கு வாலையும் ஆட்டிக் கொண்டிருக் கின்றன. நேட்டோ உறுப்பு நாடுகள் களைப்படை ந்து விட்டன. உக்ரைன் மக்களும் நேட்டோ நாடு களின் மக்களும் கொதிப்படைந்துள்ளனர். இந்தச் சூழலை பயன்படுத்தி அமைதியை உருவாக்கட்டும் ரஷ்யா.