headlines

img

உடன் கைவிடப்பட வேண்டும்

ஒன்றிய அரசின் பல்வேறு பணியிடங்களில் நேரடி நியமனக் கொள்கையை இன்னும் நாங்கள் கைவிடவில்லை என்றும் அந்தக் கொள்கை தொடரும் என்றும் ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்த  நியமனக் கொள்கை உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஏகோபித்த கருத்தாகும். அதுவே நாட்டுக்கு நலம் விளை விக்கும்.

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மையில் லேட்டரல் எண்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் ஒன்றிய அர சின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலா ளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற் கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. 

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளும் கடும் ஆட்சேபணையை தெரிவித்தன. அதுமட்டு மின்றி பாஜகவின் கூட்டணிக் கட்சியும் ஒன்றிய அரசில் இடம் பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சி யும் தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.

எந்தவொரு அரசுப்பணி நியமனமானாலும் அதில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான சிராக் பஸ்வான் வெளிப்ப டையாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், புதனன்று ஒன்றிய அரசுப்பணியி டங்களில் நேரடி நியமனங்களை கைவிடவில்லை  என்று கூறியுள்ளார். ஆயினும் எதிர்ப்பைச் சமா ளிப்பதற்காக அந்தக் கொள்கையில் இடஒதுக் கீட்டை சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்வோம் என்று சமாளிக்கிறார். அத்துடன் நமது அரசியல மைப்பில் பொதிந்துள்ள சமத்துவம் மற்றும் சமூக நீதியின் கொள்கைகளுடன், இடஒதுக்கீடு கொள் கையும் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் பிரத மர் உறுதியாக உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே இடஒதுக்கீட்டை எப்படியாவது ஒழித்துக்கட்டி விட வேண்டுமென்றே ஆர்எஸ் எஸ்சும் பாஜகவும் துடித்துக் கொண்டிருக்கின்றன. பிரதமரின் உறுதி பற்றித் தான் நமக்குத் தெரியுமே! ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வழங்கு வதாகக் கூறியதை தேர்தல் ‘ஜூம்லா’ என்று நமக்கு நாமம் போட்டவர் தானே!

அவரது உறுதி எல்லாம் இந்துத்துவா கொள்கையையும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளையையும் அரசுத்துறைகளில் நீடிக்கச் செய்வதுதானே! இந்த நேரடி நியமனங்கள் என்பது ஆர்எஸ்எஸ்காரர்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கனவான்களையும் அர சுத்துறைகளில் திணிப்பதும் அவர்களின் அத்து மீறல்களுக்கும் அராஜகங்களுக்கும் வழியமை த்துக் கொடுப்பது தானே! இதன்மூலம் இயல்பா கவே பணிமூப்பு அடிப்படையிலும் இடஒதுக்கீடு அடிப்படையிலும் அந்தப் பணிக்கு வரவேண்டி யவர்களைப் புறக்கணித்து தங்களது ஆட்களைத் திணிப்பது தானே! எனவே இந்த நேரடி நியமனக் கொள்கை உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்.