ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட பிரிவு 370-ஐ ரத்து செய்ததும், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை துண்டாடியதும் செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும், கவலை யையும் ஏற்படுத்துகிறது.
இத்தீர்ப்பு, நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள கூட்டாட்சி கட்டமைப்பின் மீது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்; கூட்டாட்சி அமைப்பு முறைக்கு மாறாக, “தேசிய பாதுகாப்பு” என்ற பெயரில் சிறப்பு உத்தரவு களை பிறப்பித்து, “தேசிய ஒருங்கிணைப்பு” என்ற பெயரில் ஓர் ஒற்றை அதிகார அரசுக் கட்ட மைப்பை வலுப்படுத்துவதற்கே இட்டுச் செல்லும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சரியான முறையில் விமர்சித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் இரண்டு யூனியன் பிரதேசங்களையும் இணைத்து மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஒன்றிய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மூலமாக அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதத்தை நம்புங்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கி றது. ஆனால் அதே வேளையில், லடாக் யூனி யன் பிரதேசம் தனியாக உருவாக்கப்பட்டது சரியானதுதான் என்றும் அங்கீகரித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பே முரண்பாடானது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட பின்னர் அம்மாநி லத்தை, மிகப் பெரிய வளர்ச்சிக்கு கொண்டு செல்வோம் என மோடி அரசு கூறியது. ஆனால் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் வளர்ச்சி தலைகீழாக மாறியுள்ளது. மோடி அரசு உத்தரவாதம் அளித்த எந்த நல் விளை வும் அங்கு ஏற்படவில்லை. மாறாக மக்களி டையே அதிருப்தியும், விரக்தியுமே அதிகரித் துள்ளது. இந்த இடைபட்ட காலத்தில் பயங்கரவா தத்துடன் தொடர்புபடுத்தி ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். பத்திரிகை சுதந்தி ரம் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டுள் ளது. அரசியல் நடவடிக்கைகள் கடும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக பல அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதை நீக்குவதற்கே நாடாளுமன்றத்திலும், நீதி மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் எதிர்க் கட்சிகள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியி ருந்தது. ஒட்டு மொத்தத்தில், மாநில அந்தஸ்து பறிக்கப்பட்ட ஜம்மு- காஷ்மீர் ஒரு திறந்தவெளி சிறைக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வந்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு காஷ்மீர் மக்களின் இதயத்தில் இடியாய் இறங்கியுள்ளது. இந்திய நீதித்துறை மீதான அம்மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது.