headlines

img

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நிதிநிலை அறிக்கை

தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப் பட்டுள்ள 2024- 25ஆம் ஆண்டுக்கான நிதி  நிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.  நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போன்று சமூகநீதி கண்ணோட்டம் பளிச்சிடுகி றது. ஒன்றிய அரசின் வஞ்சகத்தால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தபோதும், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச் சியை கருத்தில்கொண்டு பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

இந்த நிதி நிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் பயின்று  உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், போட்டித் தேர்வுக ளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை ஆகும். பண்பாட்டுத் துறை சார்ந்த பல்வேறு அறி விப்புகளும் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக சிந்து வெளி பண்பாடு கண்டுபிடிப்பு அறிவிப்பின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் பன் னாட்டு கருத்தரங்கம் உள்ளிட்ட அறிவிப்புகள் ஒன்றிய அரசின் ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு க்கு எதிரான பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. கோவையில் கலை ஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தரத்தி லான நூலகங்கள் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாநிலத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத் தும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பாசனத்திட்டங்க ளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டமும் சிறப்பானது.

ஐந்து லட்சம் குடும் பங்களை வறுமையிலிருந்து மீட்கும் வகையில் தாயுமானவர் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் சவால்களுக்கு இடையில் இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். அதே நேரத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்து மற்றும் மின் துறை ஊழியர்கள், சிறு, குறு தொழில் முனை வோரின் நீண்டகால கோரிக்கைகள் நிறை வேற்றப்பட வேண்டும்.  ஒப்பந்த பணியாளர் முறை முற்றாக கைவிடப் பட்டு நிரந்தரத் தன்மையுள்ள வேலைவாய்ப்பு கள் உருவாக்கப்பட வேண்டும். ரூ.42ஆயிரம் கோடி மதிப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு நல்ல அறிவிப்பு கள் உள்ளன. மொத்தத்தில் நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் என்பது வரவேற்கத் தக்கதாக அமைந்துள்ளது.