headlines

img

நிர்மலா சீதாராமன் - செய்வதும், செய்ய வேண்டியதும்

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனக்கு அளிக்கப்பட்ட பணியை விட்டுவிட்டு வேண்டாத வேலைகளைத்தான் தொடர்ந்து செய்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெள்ளப் பாதிப்பை சுற்றிப் பார்க்க வந்த அவர் கோவிலுக்குச் சென்று காணிக்கையை உண்டிய லில் போட வேண்டாம்; அர்ச்சகரின் தட்டில் போடுங்கள் என்று உபதேசம் செய்தார். இந்து அறநிலையத்துறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டத்தின் உள்ளக்கிடக் கையையே அவர் இவ்வாறு வெளிப்படுத்தினார்.  

இப்போது ஜல்லிக்கட்டு விளையாட்டு ஒரு சனாதன தர்மத்தின் பண்டிகை என்றும், அதற்கு எதிராகப் பேசுபவர்கள் பிரிவினைவாதிகள் என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். சங்க காலத்திலிருந்து விளையாடப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டியை சனாதனத்தோடு முடிச்சுப்போடுவதற்கு எந்தவித மான வரலாற்று ஆதாரமும் இல்லாத நிலையில், இவர் வாயில் வந்ததைஅடித்து விடுகிறார். இதை எதிர்ப்ப வர்கள் பிரிவினைவாதிகள் என்றும் விஷம் கக்குகிறார். இதுஒருபுறமிருக்க, இவரது பொறுப்பில் உள்ள நிதித்துறையில் நிலவும் அலங்கோலங் கள் தொடர்பாக பல்வேறு தரவுகள் வெளியாகி வருகின்றன.

ஒன்றிய அரசின் பட்ஜெட் என்பது பல கட்டங்களாக உண்மைகளை மூடி மறைத்த பிறகே வெளியிடப்படுகிறது; வரவு- செலவு கணக்கு வெளிப்படையாக இருந்தால் உண்மையான நிதி நிலைமை தெரிந்துவிடும் என்றும் நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் தெரி வித்துள்ளார். முக்கியமான பொறுப்பில் உள்ள சுப்பிரமணி யத்தின் குற்றச்சாட்டு குறித்து முதலில் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கட்டும், பிறகு ஜல்லிக்கட் டிற்கும் சனாதனத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்கம் அளிக்கட்டும்.  அமலாக்கத்துறை என்பது ஒன்றிய நிதித் துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்தத் துறையின் செயல்பாடு குறித்து கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காகவே அம லாக்கத்துறை ஏவிவிடப்படுகிறது. மறுபுறத்தில் பாஜகவுக்கு நிதி அளிப்பவர்களின் மோசடி களை மூடி மறைக்கவும் இந்தத் துறை துணை போகிறது.

ஒன்றிய நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து நிர்மலா சீதாராமன் பதவி விலகக்கோரி சென் னையில் ஜிஎஸ்டி மற்றும் கலால்துறை துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதம் மேற் கொண்டார். சேலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு ஏழை விவசாயிகளின் சாதி பெயரைக் குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது உட்பட அமலாக்கத்துறையை நிர்மலா சீதாராமன் தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய புகார்களுக்கு நிர்மலா சீதாராமன் பதில் சொல்லியே ஆக வேண்டும்.