உக்ரைன் போர் முடியுமா, முடியாதா என்ற விவாதமும் எதிர்பார்ப்பும் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இந்தப் போரை நடத்தி வரும் அமெரிக்க அரசுக்கும் அமெரிக்காவின் உளவு ஸ்தாபனங் களுக்கும் இடையே ஒருவித மோதல் உருவாகி யிருப்பதாக புலிட்சர் விருதுபெற்ற சர்வதேச பத்திரி கையாளர் செய்மூர் ஹெர்ஸ் கூறியிருக்கிறார்.
இந்த மோதலுக்கு காரணமாக இருப்பவர் வேறு யாருமல்ல, அமெரிக்க அரசின் கைக்கூலி யும் உக்ரைன் ஜனாதிபதியுமான விளாடிமிர் ஜெலன்ஸ்கி தான். ரஷ்யாவுடன் சற்றும் பின் வாங்காமல் தொடர்ந்து போர் புரிவதற்கு தேவை யான அனைத்து நிதி மற்றும் ஆயுதங்களை உக்ரைனுக்கு அமெரிக்காவும், அதன் தலைமை யிலான நேட்டோ ராணுவக் கூட்டணியும் அளித்து வருகின்றன. இந்த பெரும் நிதியில் கணிச மான தொகையை ஜெலன்ஸ்கியும் அவரது ராணுவத்தின் தளபதிகளும் கையாடல் செய்து வருகிறார்கள் என்பதை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் உளவுப் பிரிவினர் கண்டுபிடித்துவிட்டார்கள்.
இதுதொடர்பாக ஜெலன்ஸ்கியிடம் நேரடியாகவே வந்து, கிட்டத்தட்ட ஒரு விசாரணையையே நடத்திச் சென்றிருக்கிறார் அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏவின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ். கீவ் நகரத்திற்கு சிஐஏ இயக்குநர் வந்துசென்றதன் உண்மையான காரணம் இதுதான் என்பது தெரிய வந்தவுடனே ஜெலன்ஸ்கி ராணுவத்தின் உயர் அதிகாரிகளாக உள்ள - ஊழல் தொகை கிடைக்காத பலரும் எரிச்சலடைந்து, ஜெலன்ஸ்கி நிர்வாகத்துடன் முரண்பாடு கொண்டுள்ளனர்.
ஜெலன்ஸ்கியும், அவரது ராணுவத்தின் 35 தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளும், போருக்காக அமெரிக்கா அளிக்கும் நிதியில் கணிசமான தொகையை கையாடல் செய்திருப் பதை ஆதாரப்பூர்வமாக பட்டியலுடன் கொடுத்து எச்சரித்துவிட்டு சென்றுவிட்டார் சிஐஏ இயக்குநர். அவர் அமெரிக்காவுக்கு சென்று, அமெரிக்க அரசு நிர்வாகத்திற்கு அளித்த அறிக்கையில், ராணுவ வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அமெரிக்கா அளித்த நிதியிலிருந்து உக்ரைன் ஜனாதிபதியும் சில ராணுவத் தளபதிகளும் புதிய மெர்சிடஸ் கார் களை வாங்கி அதில் சொகுசாக ஊர்வலம் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று காட்டத்து டன் குறிப்பிட்டிருப்பதாக, பத்திரிகையாளர் ஹெர்சின் புலன்விசாரணை தெரிவிக்கிறது.
அமெரிக்க ராணுவத் தலைமையகமும் அதன் கீழ் செயல்படும் உளவுப்பிரிவுகளும் ஜெலன்ஸ்கியின் ஊழலையும் ஆடம்பரத்தையும் ஆதாரப்பூர்வமாக வெள்ளைமாளிகைக்கு அளித்திருந்தாலும், ஜனாதிபதி ஜோ பைடன், ஜெலன்ஸ்கியை மிக ஆழமாக நம்புகிறார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியான ஜோ பைடனுக்கு எப்படியேனும் ரஷ்யாவையும் அதன் ஜனாதிபதி விளாடிமிர் புடினையும் வீழ்த்து வது மட்டுமே குறியாக உள்ளது. ஏகாதிபத்தியத் தால் உருவாக்கப்பட்ட போரால் உருக்குலைந்து கிடக்கும் உக்ரைன் மக்களின் வாழ்க்கையைப் பற்றியோ, ஊரே பற்றி எரிந்தாலும் ஊழலில் மிதக்கும் தனது கைக்கூலியின் செயல்பாடுகள் பற்றியோ பைடனுக்கு கவலையில்லை.