கொரோனா வைரஸ் தாக்குதல் விலை மதிப் பற்ற லட்சக்கணக்கான மனித உயிர்களை பலி கொண்டது மட்டுமின்றி, உலகப் பொருளாதா ரத்தையும் நிலை குலைய வைத்தது. அதனு டைய பாதிப்பிலிருந்து முழுமையாக மீள முடியாத நிலையில் உருமாற்றம் அடைந்த கோவிட் 19 வைரஸ் மீண்டும் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகை யில் பரவி வருகிறது.
பிஏ5, பிஏ2 பிஎப்7 ஆகிய உருமாறிய ஓமைக் ரான் வைரஸ் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, பிரேசில் ஆகிய நாடுக ளில் பரவத் துவங்கியுள்ளது.சீனாவிலும் இதனு டைய பாதிப்பு கடுமையாக உள்ளது என தக வல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ நுண்கிருமி இந்தியாவிலும் நுழைந்துள்ளது.
முந்தைய வைரஸ் பரவலைவிட இப்போது ஏற்பட்டுள்ள உருமாறிய வைரஸ் பரவல் ஆபத்து நிறைந்ததாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அறி குறிகள் ஏதுமின்றி நேரடியாக தாக்கும் நுண்ணு யிரி மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின் றனர்.
கோவிட்19 பரவியபொழுது அதை எதிர்கொள் வது உலகத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. கடு மையான முயற்சிக்கு பிறகே தடுப்பூசிகள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்தியா உட்பட பல்வேறு நாடு களில் தடுப்பூசியின் காரணமாக வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் புதிய நுண்கிருமி பரவும் வேகமும் மிக அதிகமாக இருக்கும் என்று கண்ட றியப்பட்டுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கை கள் அதை விட வேகமாக இருப்பது அவசியமா கிறது. கொரோனா தாக்குதலுக்கு பிறகு உருமாறிய வைரஸ் தாக்குதல் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வந்தபோதும் முற்றாக தடுத்து நிறுத்தும் வழி வகைகள் கண்டறியப்படவில்லை. இந்த ஆய்வு கள் தொடர்வது அவசியமாகிறது.
ஒன்றிய அரசும், தமிழக அரசும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு களை வெளியிட்டுள்ளன. மீண்டும் முகக்கவசம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க, நோயின் தீவிரத்தால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க மருத்துவ ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும், ஒன்றிய, மாநில அரசுகள் விழிப்புடன் இருப்பது அவசியமாகும்.
கொரோனா வைரஸ் பரவலின்போது ஒன்றிய அரசு பெரும் பகுதி மக்களுக்கு அளித்த நிவார ணம் என்பது மிகவும் சொற்பமே. ஆபத்தான நிலையை பயன்படுத்திக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகள் மேலும் கொள்ளை லாபம் சம்பா திப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஒன்றிய அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த அணுகுமுறை தொடர்ந்தால் பேரழிவு ஏற்படும். தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மருத்துவ மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மக்க ளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த அணுகு முறையும் விழிப்புணர்வும் தொடர வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம்.