குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்த மண்ணின் சட்டம். அதை அமல்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்று ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக அரசு நிறைவேற்றியது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. எனினும் நாடு முழுவதும் இந்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஒன்றிய அரசு அறிவித்தது.
ஆனால் தண்ணீருக்குள் போடப்பட்டிருக் கும் பாஸ்பரஸ் போல இருக்கும் இந்தச் சட்டத்தை எந்த நேரத்திலும் பாஜக அரசு சிறு பான்மை மக்களுக்கு எதிராக பாய்ச்சும் என்று அரசியல் நோக்கர்கள் அச்சம் தெரிவித்தனர். அந்த அச்சத்தை மெய்ப்பிக்கும் வகையில்தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் இப்போது உறை வாளை மீண்டும் உருவி சுழற்றத் துவங்கியுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்டுவது, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தது என்பதெல்லாம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் குறிக்கோளாகும். இந்த இரண்டை யும் நிறைவேற்றிவிட்ட எக்காளத்துடன் அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.
மோடி ஆட்சியினால் உருவாக்கப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது மதரீதியாக மக்களை பிளவுபடுத்தக்கூடியது. இது இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்தியாவுக்கு புலம் பெயர்ந்துள்ள இலங்கை தமிழர்களுக்கும் எதிரானது.
இந்தச் சட்டம் உருவானபோது நாடு முழுவ தும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. சொந்த நாட்டுக்குள்ளேயே சிறுபான்மை மக்களின் குடி யுரிமையை பறித்து அவர்களை அகதிகளாக மாற்றி முகாம்களில் அடைத்து வைக்கும் தீய நோக்கத்தை பொதித்து வைத்துள்ள ஆபத்தானசட்டம் இது.
கடந்த பத்தாண்டு கால நரேந்திர மோடி ஆட்சி அனைத்து துறைகளிலும் தோல்விய டைந்துள்ளது. அனைத்து பகுதி மக்களின் வாழ்வா தாரமும் சிதைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களின் வயிற்றுப் பிரச்சனை முன்னுக்கு வரும் என்பதால் அதை மடைமாற்றம் செய்ய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசத் துவங்கியுள்ளார் அமித்ஷா. குடிகெடுக்கும் இந்த சட்டத்தை அமலாக்க முயன்றால் போராட்டங் கள் வெடிப்பதையும் தடுக்க முடியாது.
பொது சிவில் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவையும் இந்துத்துவா அமைப்பி னரின் செயல் திட்டத்தில் உள்ளது. சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் குடியுரிமையை பறிக்கும் வகையில் இந்தச் சட்டத்தை கடும் எதிர்ப்பு க்கு இடையில் நிறைவேற்றி வைத்துள்ளனர். பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத் தப்போவதாகவும் மிரட்டி வருகின்றனர்.