மனிதர்களின் அன்றாட தேவைகளில் இன்று இணையம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது. அதே இணையத்தின் வழியே நம்மை மூன்றாவது கண் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. இதில் பெரும் பகுதி நம்மை ஒழுங்கு படுத்தி வழி நடத்துவதற்காகக் கண்காணிப்பவை அல்ல. நம்மிடம் வழிப்பறி செய்வதற்காகவே வடி வமைக்கப்பட்ட கண்களாகவே இருக்கின்றன. இதனை ஒழுங்குபடுத்த இதுவரை இந்தியாவில் முறையான எந்த ஏற்பாடும் இல்லை.
இதுவரை மக்களுக்கு எது தேவையோ அதனை தேடி வாங்கி நுகர்ந்து வந்தனர். ஆனால் இன்று இணையம் மூலம் இருந்த இடத்திலி ருந்தே நமக்குத் தேவையானவற்றை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரம் மறுபுறம் அதே இணையம் மற்றும் பிரத்யேக செயலிகள் நுகர்வோரை மூன்றாவது கண்கொண்டு கவனித்து வருகின்றன. அது நமக்கு வழிகாட்டுவதாக அல்ல; பெரும்பகுதி வழிப்பறி செய்வதற்காகவே என்பது பல்வேறு ஆய்வுகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, நமக்குப் பிடித்த உணவைச் செயலிகள் மூலம் ஆர்டர் செய்து சாப்பிட்டால், மறுமுறை நமக்குப் பிடித்த உணவுகளின் பட்டியலை மட்டுமல்ல, அந்த உணவகங்களின் பெயர்களையும் பரிந்துரை செய்கிறது. இதனை டேட்டா நெட் ஒர்க் லூப் (என்டிஏ) என்கிற வலைப்பின்னல் செயல்பாட்டு வளையம் துரித மாகச் செயல்படுத்துகிறது. இந்த தொழில்நுட் பத்தை மொத்தமாக கையிலெடுத்து இந்திய வணிகத்தைக் கபளீகரம் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. அதற்குரிய அனு மதியையும் ஒன்றிய அரசு பல்வேறு வகையில் வழங்கியிருக்கிறது.
இதே வேலையைத்தான் கூகுள் நிறுவனம் வேறொரு முறையில் செய்து வருகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் அந்த நிறுவனம் விரும்பும் செயலிகள் மட்டுமே அதிகளவில் நுகர்வோரைச் சென்றடையும் வழியில் வடிவமைக்கப்பட்டி ருக்கிறது. இதனை இந்தியப் போட்டி ஆணை யம் (ஐசிசி) கண்டறிந்து ரூ.1337 கோடி அபராதம் விதித்திருக்கிறது. இது போன்று தொழில்நுட் பங்கள் சார்புத் தன்மையுடன் பயன்படுத்தும் போது சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் ஏக போகமாக மாறிவிடும் மிகப்பெரிய ஆபத்தும் உருவெடுக்கிறது.
மறுபுறம் இதனை ஒழுங்குபடுத்தாததன் விளைவு இணையக் குற்றங்கள் அதிகமாக நடை பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 ஆவது இடத்திலிருக்கிறது. காதல் செயலி, கடன் செயலி, சூதாட்டச் செயலி, விளையாட்டுச் செயலி என விதவிதமாக செயலிகள் மூலம் சைபர் குற்றங்கள் அரங்கேறுகின்றன.
2018இல் 2 லட்சத்து 8 ஆயிரம் சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் 2020இல் 11 லட்சத்து 60 ஆயிரம் குற்றங்கள் பதி வாகியிருக்கின்றன. டிஜிட்டல் இந்தியா எனப் பெருமை பேசுவது மட்டும் போதாது. அதில் அதி கரித்து வரும் குற்றச் செயல்களையும் தடுத்திடும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சியும் காண வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி யாக இருக்க முடியும்.