headlines

img

நிழல்தரா வாய்ப்பந்தல்...

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது; ஒன்றிய பாஜக அரசின் கடந்த 10 ஆண்டுகள் ஏழைகளுக்காக அர்ப்ப ணிக்கப்பட்டிருக்கிறது எனப்  பிரதமர் பேசி வரு கிறார். ஆனால்  உண்மை விபரங்கள், இது திட்ட மிட்டுக் கட்டமைக்கப்படும்  வாய்ப்பந்தல் பொரு ளாதாரம் என்பதையே காட்டுகிறது. இந்தியாவில் மூன்றாவது காலாண்டில் புதிய முதலீடு  46 சதவிகிதம் சரிவு ஏற்பட்டிருக்கி றது. எஃகு, சிமெண்ட், போக்குவரத்து சாதன உற்பத்தி 50 சதவிகிதத்திற்கு மேல் வீழ்ச்சி யடைந்திருக்கிறது.

 ரயில்வே துறை முதலீட்டில் 92 சதவிகிதம் சரிவு ஏற்பட்டிருக்கிறது. கடந் தாண்டு செப்டம்பர் மாதம் வரை வெளியாகி யுள்ள விபரங்களின் படி நேரடி அந்நிய முதலீடு 38 பில்லியன் டாலரிலிருந்து 13 பில்லியன் டால ராகச் சரிவடைந்திருக்கிறது. 2022 - 23 நிதி யாண்டில்  4 சதவிகிதமாக  இருந்த  வேளாண் துறையின் வளர்ச்சி,   2023 - 24 நிதியாண்டில் 1.8 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதில் எங்கே இருக்கிறது வளர்ச்சி? கடந்த 20 ஆண்டுகளை விட  நடப்பு நிதி யாண்டின் நுகர்வு 4.4 சதவிகிதமாகக் குறைந்தி ருக்கிறது.

இதன் தொடர்ச்சி  உள்நாட்டுக் கிராக்கி யைக்  குறைத்து  உற்பத்தியை தேக்கமடையச் செய்கிறது. முதலீடுகளின் அளவையும் குறைப்ப தற்கு இட்டுச்செல்கிறது. இதன் எதிரொலியாக மறுபுறம் வேலையின்மை அதிகரிக்கிறது. இது தான் இந்தியப் பொருளாதாரத்தின் உண்மை நிலை. இதனை தலைகீழாக மாற்றிச் சொல்வ தால் வளர்ச்சியை உருவாக்க முடியாது. வளர்ச்சி என்ற வதந்தியைத்தான் உருவாக்க முடியும்.

இதையே மோடி முழுநேரமாக செய்து வரு கிறார்.  இதற்கு ஏற்றவாறு நிதி ஆயோக், கடந்த 9  ஆண்டுகளில் 25 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. அப்படியென் றால் ஏன் உலக பட்டினி குறியீட்டு பட்டியலில்  125 நாடுகளில் இந்தியா 111 ஆவது இடத்தில் இருக்கி றது?  2014 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டு களில் நுகர்வுச் செலவுக் கணக்கெடுப்பு நடத்தப் படவில்லை. நுகர்வு செலவைக் கணக்கிடாமல் எப்படிக் கடந்த 9 ஆண்டுகளில் வறுமையிலிருந்து மீண்டவர்களைக் கணக்கெடுக்க முடிந்தது?   ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையைப்  பயன்படுத்தி இந்தியா ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை அதி களவில் இறக்குமதி செய்தது. ஆனால் மக்க ளுக்கு விலையைக் குறைத்து  விற்கவில்லை.

மாறாக  அம்பானி, அதானி உள்ளிட்ட பாஜக கூட்டுக்களவாணி கார்ப்பரேட்கள் மூலம் ஐரோப் பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது, ஏன் ? உண்மையில் கடந்த 10 ஆண்டுகளாக அதானி, அம்பானிக்காகவே பாஜக ஒன்றிய ஆட்சியை அர்ப்பணித்திருக்கிறது; பிரதமர் ஏழைகளுக் காக அர்ப்பணித்துள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை என்பதை நாடறியும். வாய்ப்பந்தல் ஒரு போதும் நிழல் தராது.