இந்தியாவின் வேலையின்மை நெருக்கடி மேலும் ஆழமாகியுள்ளது என்ற புதிய விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்திய இளை ஞர்களில் 40 சதவீதம் பேர் எந்த வேலையும் கிடைக்கப்பெறாமல், வேலைவாய்ப்பு வட்டத் திற்கு வெளியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு விதமான தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்றாலும் அதில் பங்கேற்பவர்களில் 10 சதவீதம் பேருக்குக் கூட வேலை உத்தரவாதம் கிடைப்பதில்லை என்று தெரியவந்துள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளில் இந்தியா தான் இளைஞர் களை மிக அதிகமாகக் கொண்ட நாடு. இந்திய மக்கள்தொகையில் 66சதவீதம் பேர் 35 வய துக்கு கீழே உள்ளவர்கள். அதாவது உலகில் உள்ள மக்களில் 5ல் ஒருவர் இந்தியர் ஆவார். இத்தனை பெரிய இளைய தலைமுறையைக் கொண்டுள்ள நாட்டில் கடந்த 20 ஆண்டு கால மாக வேலையின்மை விகிதம் படிப்படியாக அதி கரித்து தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.
2010ல் 2 சதவீதமாக இருந்த வேலையின்மை, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2015ல் 5சதவீதமாக அதிகரித்தது. 2018ல் 6.1சதவீதமாக அதிகரித்த வேலையின்மை தற்போது 8 சதவீதமாக மிகப் பெரும் அளவிற்கு வீங்கி நிற்கிறது.
2021, 2022 ஆண்டுகளில் மட்டும் ஒன்றிய அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புக்காக 1.8 கோடிப் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் வெறும் 38,850 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கப் பெற்றுள்ளது. அதாவது வெறும் 0.2 சதவீதம். மிகக்குறைந்த கல்வித்தகுதி தேவைப் படும் நான்காம், ஐந்தாம் பிரிவு வேலைகளுக்கு கூட முனைவர் பட்டம் பெற்றவர்கள், பொறி யாளர் பட்டம் பெற்றவர்கள், எம்.பி.ஏ. பட்டதாரி கள் உட்பட பல லட்சக்கணக்கானோர் விண்ணப் பித்து வருவது சர்வசாதாரணமாக மாறியுள்ளது.
அரசுத்துறைகளில் உள்ள பல லட்சக்கணக் கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மோடி அரசும் சரி, பல்வேறு மாநில அரசுகளும் சரி தயாராக இல்லை. மாறாக, மிகவும் அத்தி யாவசிய தேவையாக உள்ள பணியிடங்களை மட்டும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது என்பது தீவிரமடைந்துள்ளது. அந்த வேலை களிலும் கூட மதிப்பூதியம், தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் வெறும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மட்டுமே கிடைக்கப் பெறுகிற அவ லம் நீடிக்கிறது. தனியார் துறையில் இதைவிடக் குறைவாகவே ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்திய வேலையின்மை நிலவரம் இவ்வளவு மோசமாக உள்ள சூழலிலும் இதுவரையிலும் மோடி அரசு முழுமையான ஆய்வறிக்கைகளை வெளியிடவில்லை. இந்திய இளைஞர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு வேலையில்லை என்றால், அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பு கிறது உலகவங்கி. இத்தனை தீவிரமான வேலை யின்மை, வெடிக்க காத்திருக்கும் குண்டு போன்றதே.