ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு இந்தியாவில் தங்கியுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தன்னை ஆட்சியில் இருந்து வெளி யேற்ற அமெரிக்கா சதி செய்ததாகவும், தற்போதைய இடைக்கால அரசாங்கத்தையும் அவர்கள் பயன்படுத்துவார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முன்பு இறுதியாக உரையாற்ற இருந்ததாகவும் ஆனால் கலவரக்காரர்கள் அவரது அரசு இல்லத்தை முற்றுகையிட்டதால் அந்த உரை நிகழ்த்தப்படவில்லை எனவும் தற்போது அவர் தமது அவாமி லீக் கட்சியினருக்கு அந்த செய்தியை வெளியிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமைந் துள்ள வங்கதேசத்தின் செயின்ட் மார்ட்டின் தீவை அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு விட்டுக் கொடுத்திருந்தால் எனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்க முடியும்” எனவும் “புதிய இடைக்கால அரசாங்கத்தை அமெரிக்கா பயன் படுத்திக்கொள்ளும்” ஷேக் ஹசீனா அச்செய்தி யில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“அவர்கள் மாணவர்களின் பிணங்களை வைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பினர். நான் பதவியை ராஜினாமா செய்யாமல் அங்கு இருந்திருந்தால் இன்னும் அதிகமான மாணவர் களின் உயிர் போயிருக்கும். அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் நான் எனது பதவியை ராஜினாமா செய்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். ஷேக் ஹசீனா அரசு அமெரிக்கா வின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் இந்தியா - சீனா வுடன் உறுதியான அரசியல், பொருளாதார உறவு களையும் மேற்கொண்டு வந்தது. அதேநேரத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளையே அமலா க்கியது. இதன் காரணமாக வேலையின்மை உள் ளிட்ட கடும் நெருக்கடிகள் சூழ்ந்தன. இதனால் இயல்பாகவே எதிர்ப்பு இயக்கம் எழுந்தது. அதை அமெரிக்கா பயன்படுத்தி கொண்டு ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்றியுள்ளது என விபரங்கள் உறுதி செய்கின்றன.
புதிதாக அமைந்துள்ள வங்கதேச இடைக் கால அரசில் அங்கம் வகிக்கும் வங்கதேச தேசிய வாதக் கட்சி (BNP), ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 17பேர் கொண்ட குழுவில் அமெரிக்கவுடன் நேரடித்தொடர்பில் உள்ள நபர்களும் அடங்கியுள்ளனர் என வங்க தேச அறிவுஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதும் கடந்து செல்லக் கூடியது அல்ல.
இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், அமெரிக்கா வுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளார் என விக்கிலீக்ஸ் புலனாய்வுச் செய்திகளை வெளி யிட்டுள்ளது. அவர் தொடர்ந்து பலமுறை வங்க தேச அரசியல் சூழல் குறித்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன் விவாதித்துள்ளார் எனவும் விப ரங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஏகாதி பத்தியம், ஆசியாவைச் சுற்றி வளைத்துக் கொண் டிருக்கிறது என்பதற்கான சாட்சியம் இது.