headlines

img

இதுவல்ல காலத்தின் தேவை!

‘இந்திய விழுமியங்களை’ அடிப்படையாகக் கொண்ட கல்விமுறை காலத்தின் தேவை என்றும் இந்த கல்வி முறையை தேசிய கல்விக் கொள்கை மூலம் ஒன்றிய அரசு அமல்படுத்தி வருகிறது என்றும் பிரதமர் மோடி ஞாயிறன்று பேசியிருக்கிறார். ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதியின் 200ஆவது பிறந்த தினத்தையொட்டி காணொலி மூலம் பேசிய அவர், வேதங்களுக்குத் திரும்ப வேண்டுமென தயானந்தர் அறைகூவல் விடுத்தார் என்றும் கூறியிருக்கிறார்.

இந்திய விழுமியங்கள் என்பது பிராமணர் கள், சத்திரியர்களில் மன்னர் குடும்பத்தினர்க்கு மட்டுமே கல்வி கற்றுத் தந்த முறைதானே! குரு குலக் கல்வி என்ற பெயரில் வில்வித்தை உள் ளிட்டவற்றை கற்றுத் தருவது தானே! அதை தானே கற்றுக் கொண்டதால் ஏகலைவனின் கட்டை விரலை காவு வாங்கிய கல்விமுறை தானே! பிராம ணன் எனக்கூறி கற்றுக் கொண்டதால் உனது வித்தை மறந்து போகும் என கர்ணனுக்கு சாபம் கொடுத்த கல்வி முறைதானே! அதனைத் தானே ஆரிய சமாஜ பள்ளிகளும் இன்றைய ஆர்எஸ்எஸ் பள்ளிகளும் கடைப்பிடித்து வருகின்றன.

ஆனால் இந்திய நாட்டு மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டுமென்ற அரசி யல் சட்டக் கடமையை மறுதலிக்கும் வகையில்,  புதிய புதிய பெயரிலும் வடிவத்திலும் கொண்டு வரப்பட்டிருப்பது தான் இன்றைய தேசிய கல்விக் கொள்கை. அரசு கல்வி நிலையங்களில் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை வெவ்வேறு பெயரிலும் வடிவி லும் திணிப்பது தான் தேசிய கல்விக் கொள்கை. 3,5,8ஆம் வகுப்புகளுக்கு தேர்வு, பிளஸ்-2 முடித்த பிறகு கல்லூரியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு,  மருத்துவக் கல்வி பயில நீட், பொறியியல் படிக்க ஜேஇஇ தேர்வு என ஏழை, எளிய மக்களை மேலும் படிக்கவிடாமல் செய்வது தானே உங்கள் கல்விக்கொள்கை? அதுமட்டுமல்லாமல் குலக் கல்வித் திட்டம் போல பெற்றோர்களின் தொழிலில் பயிற்சி பெறு வது என்று சாதியை திணிப்பதும், இந்தி, சமஸ்கிரு தம் ஆகியவற்றை கட்டாயம் கற்க வேண்டும் என்பதும் தானே உங்கள் கல்விமுறை.

இதுவா காலத்தின் தேவை? 21ஆம் நூற்றாண்டில் அறிவியல்பூர்வ, உலக ளாவிய முன்னேற்றங்களுக்கு ஏற்ப இல்லாமல் பிற்போக்கான, புராண, இதிகாச கற்பனைகளை பாடங்களாகத் திணிப்பதுவா இந்திய விழுமியம்? அருகமை பள்ளிகளை மூடிவிட்டு வளாகக் கல்வி நிலையங்கள் என்ற பெயரில் கல்வியை வணிக மயமாக்குவது தானே உங்களது கல்விமுறை. நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவசக்கல்வி வழங்குவதும் அது அறிவியல்பூர்வமாகவும் முற் போக்கானதாகவும் இருக்க வேண்டும் என்பதுவுமே இன்றைய இந்தியாவுக்கு தேவையான கல்விமுறை.