அடி மேல் அடி, இடி மேல் இடி என்பது போல நாடு முழுவதும் சுங்கச் சாவடி கட்டணங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்பட்டு வரு கின்றன. இதன்படி ஒவ்வோராண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கச் சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது. மாற்றியமைக்கப் படுவதாகக் கூறப்பட்டாலும் ஒரு முறை கூட கட்ட ணம் குறைக்கப்பட்டதில்லை. மாறாக, ஒவ்வொரு முறையும் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயர்த் தப்பட்டுக் கொண்டேதான் வந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மட்டும் கட்ட ணம் உயர்த்தப்படுவதில்லை. அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வும் நிறுத்தி வைக்கப்படுவதாக அறி விக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 67 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப் பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாக னங்களுக்கு ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்ட ணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதில் மாநில அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கு கூட விதிவிலக்கு இல்லை. இத னால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மேலும் மேலும் நெருக்கடியில் தள்ளப்படுகின்றன. சரக்கு வாகனங்களுக்கு அதிகப்படியான கட்டணம் வசூ லிக்கப்படுவதினால் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது.
சுங்கச் சாவடி வசூல் என்பது ஒரு மர்மப் பிரதே சமாகவே உள்ளது. காலாவதியான சங்கச் சாவடி களில் பராமரிப்புச் செலவிற்காக 40 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அத்தகைய சுங்கச் சாவடிகளிலும் கூடுதலாகவே கட்டணங்கள் வசூலிக்கப்படுகின் றன. காலாவதியான சுங்கச் சாவடிகள் எவை என்ற விவரத்தைக் கூட தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் வெளியிடுவதில்லை.
இரண்டு சுங்கச் சாவடிகளுக்கு இடையில் 60 கி.மீ இடைவெளி இருக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி எல்லைகளைச் சுற்றி 10 கி.மீட்டருக்குள் சுங்கச்சாவடி இருக்கக் கூடாது என்ற விதிகள் எல்லாம் பின்பற்றப்படுவதில்லை. உள்ளூர் மக்க ளுக்கான கட்டணங்களுக்கான விலக்கும் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை.
உச்சக்கட்டமாக குஜராத்தில் ஒரு போலி சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு தொடர்ந்து கொள் ளையடிக்கப்பட்டு வந்தது சமீபத்தில் அம்பலமா னது. சாலைப் பராமரிப்பில் அலட்சியம் என்பதை யும் தாண்டி குறைந்தபட்ச வசதிகள் பெரும்பா லான சுங்கச் சாவடிகளில் இருப்பதில்லை. இந்த லட்சணத்தில் சுங்கச் சாவடி கட்டண வசூல் முறையை மாற்றியமைக்க ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மொத்தத்தில் சுங்கச் சாவடி வசூல் என்பது 24 மணி நேரமும் இயங்கும் கொள்ளைச் சாவடியா கவே மாறிவிட்டது. இதை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமாகிறது.