அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் தேர்தல் பத்திர திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக வழங்கியுள்ள தீர்ப்பு கைதட்டி வரவேற்க வேண்டிய ஒன்று. இந்திய ஜனநாயகத்தின் வேர்களைக் காப்பாற்றும் வகை யிலும் தேர்தல் ஜனநாயகம் பணநாயகமாக மாற்றப்படுவதை தடுக்கும் வகையிலும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தகைய வழக்கை தொடுத்ததன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தன்னுடைய தேசபக்த கடமையை நிறை வேற்றியுள்ளதோடு, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் போலியான பொய் முகத்தை உச்ச நீதிமன்றத்தின் மூலம் கிழித்து எறிந்துள்ளது. இந்த திட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரா னது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதோடு தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் அனைத்தை யும் மார்ச் 13ஆம் தேதிக்குள் எஸ்.பி.ஐ. வங்கி அளிக்க வேண்டுமென்றும், அந்த விபரங்க ளை தேர்தல் ஆணையம் தங்கள் இணைய தள பக்கத்தில்பதிவேற்ற வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 2018ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு இந்தத் திட்டத்தை கொண்டு வந்தது.
துவக்கத்திலிருந்தே மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை கடுமையாக எதிர்த்தது. ஆனால் கருப்புப் பணத்தை தடுக்க இத்திட்டம் உதவும் என பாஜக சப்பைக் கட்டு கட்டியது. அது பொருத்தமற்றது என்று உச்சநீதி மன்றமும் இப்போது உறுதி செய்துள்ளது. ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்தி காசோ லையாக பெற்று அதனை அரசியல் கட்சிக ளுக்கு நிறுவனங்கள் நிதியாக தரலாம் என்றும் ஆனால் யாருக்கு யார் நிதி கொடுத்தது என்பதை வங்கி வெளியே தெரிவிக்க வேண்டிய அவசிய மில்லையென்றும் மோடி அரசு கூறியது. இதன் மூலம் அதிகமான நிதியை வாரிச் சுருட்டியது பாஜகதான். 2018ஆம் ஆண்டு முதல் 2023 வரை பாஜக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6,564 கோடியை நிதியாக பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் அடிமடியில் கை வைக்கும் வகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள் ளது. அவசரச் சட்டம் மூலம் இந்தத் தீர்ப்பை அர்த்தமற்றதாக்க ஒன்றிய அரசு முயலுமானால் இந்திய ஜனநாயகத்தின் மீதும், நீதித்துறை மீதும் தொடுக்கப்படும் கொடூரமான தாக்குதலாக அது அமையும். அனைத்து ஜனநாயக சக்திகளாலும் வரவேற்கப்பட வேண்டிய இந்த தீர்ப்பை நிலை நிறுத்தும் அவசியம் ஜனநாயக சக்திகளுக்கு உள்ளது.