தனது வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்க்கனை ஒருபுறம் பெய்ஜிங்கிற்கு அனுப்பி விட்டு, அவர் அங்கே ஜனாதிபதி ஜின்பிங்குடன் கைகுலுக்கிக் கொண்டிருந்த அதே வேளையில், மறுபுறம், ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்று அவதூறு பரப்பியிருக்கிறார் ஜோ பைடன்.
கலிபோர்னியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “எனது செயல்பாடுகள் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் போன்ற சர்வாதிகாரிகளுக்கு பெரும் சங்கடமாகத்தான் இருக்கும்” என்று பேசியது, சீனாவை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
“பைடனின் பேச்சு முற்றிலும் பொறுப்பற்றது, சீனாவின் அரசியல் கவுரவத்திற்கு இழுக்கா னது, சர்வதேசிய ராஜிய மாண்புகளுக்கு எதி ரானது, சீனாவைப் பற்றிய அடிப்படை உண்மைக ளுக்கு முற்றிலும் மாறானது, முற்றிலும் அபத்த மான, முற்றிலும் பகுத்தறிவுக்கு பொருந்தாத பேச்சு அது” என்று கடுமையான பதிலடி கொடுத்தி ருக்கிறது சீனா.
ஜூன் 18 அன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்க்கன் பெய்ஜிங் பயணம் மேற்கொண்டிருந்தார். கடந்த ஐந்தா ண்டு காலத்தில் சீனாவுக்கு நேரடியாக பய ணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க கேபினட் அமைச்சர் இவர் தான் என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்கா - சீனா இடையிலான உறவு களில் கடுமையான விரிசல் நீடித்து வரும் நிலை யில், தனது முக்கிய அமைச்சரை நேரில் அனுப்பி, உறவுகளை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா உள்ளது என்பதே, பிளிங்க்கன் பயணம் சொல்லும் சேதி.
சோசலிச சீனாவுக்கு எதிராக அரசியல், பொருளாதாரம், ராணுவம் ஆகிய தளங்க ளில் அனைத்து விதங்களிலும் முற்றுகையிட முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம், தான் நினைத்தபடி சீனாவின் வளர்ச்சியையோ, அதி கரித்து வரும் அதன் சர்வதேச செல்வாக்கை யோ தடுத்து நிறுத்த முடியவில்லை. அது மட்டுமல்ல, சமீப மாதங்களாக உலக வர்த்த கத்தில் டாலரின் ஆதிக்கத்தை தகர்க்கும் நடவடிக் கையில் சீனா தீவிரமாக ஈடுபட்டிருப்பது, அமெ ரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பின்னணியிலேயே, சீனாவுடனான உறவை சீர்செய்ய வேண்டிய கட்டாயத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் வரும் நிலை ஏற்பட்டது. ஆனால் அதே வேளை யில் அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுக்கு எதி ரான, சீனா பின்பற்றி வரும் சோசலிச பொருளா தாரக் கொள்கைகளுக்கு எதிரான வெறுப்பை யும், ஆத்திரத்தையும் மூட்டை கட்டி வைத்து விடவில்லை.
ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு உலக அரங்கில் மேலும் மேலும் தீவிரமடைவது அமெரிக்காவின் எரிச்சலில் வெளிப்படுகிறது. சோசலிச நாடு களின் தலைவர்களை எப்போதுமே ஏகாதி பத்திய முதலாளித்துவம் சர்வாதிகாரிகள் என்றே அவதூறு செய்து வந்திருக்கிறது. ஏனென்றால் முதலாளித்துவத்தின் சர்வ அதிகாரத்தை ஒடுக் கும் வல்லமை சோசலிசத்திற்கு மட்டுமே உண்டு.