headlines

img

புகழை மறைக்க முடியாது

பாரதிய ஜனதாவின் தமிழ்நாட்டு பிரிவின் இன்னொரு தலைவர் போலவே செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசும் போது, சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை; நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியின் போராட்டமே முக்கியக் காரணம் என்று கூறியிருக்கிறார். மேலும் நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அல்ல, நேதாஜியே தேசத் தந்தை என்று உளறியிருக்கி றார்.

இது ஆர்எஸ்எஸ்சின் நீண்டகால பேச்சுக்க ளின் தொடர்ச்சியே. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு சிறிதள வும் பங்களிக்காத ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் தலைவர்கள் பிரிட்டிஷாருக்கு அடிமைச் சேவகம் செய்ததோடு விடுதலைப் போராட்டத் தலைவர்களை காட்டிக் கொடுத்தும் அன்றைய சமஸ்தான மன்னர்களுக்கு வால் பிடித்தும் வந்த னர். இவர்களது மூலவரான சாவர்க்கர் மன்னிப் புக் கடிதம் எழுதிக் கொடுத்து வாழ்நாள் முழு வதும் பென்சன் பெற்றுக் கொண்டதையும் மறைத்து விட முயற்சிக்கிறார்கள்.

விடுதலைப் போராட்டத்தில் பிரிட்டிஷா ருக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவதில் முன்னின்றவர் மகாத்மாகாந்தி. பிரிட்டிஷா ரால் நாடு கடத்தப்பட்ட நிலையிலும், வெளிநாடு களில் வாழ்ந்த இந்தியர்களை அணிதிரட்டி இந்திய தேசிய ராணுவம் அமைத்து நாட்டு விடு தலைக்காக போர் தொடுத்து புகழ் பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அத்துடன் விவசா யிகள் தொழிலாளர்களை அணிதிரட்டி விடு தலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கம்யூ னிஸ்ட்டுகள். இந்தப் பின்னணியிலே 1946 கப்பற் படை எழுச்சிக்குப் பின் இந்திய விடுதலை அமைந்தது. இதில் முக்கியக் காரணம் என்று சொல்லி காந்தியை பின்தள்ளுவதற்கு காரணம் இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்காக முன்னின்ற தற்கான ஆர்எஸ்எஸ் வெறுப்பையே பிரதிபலிக் கிறது.

அந்த எண்ணத்தின்படிதான் ஆர்.என். ரவியும் காந்தி மீது நாடு பிரிந்ததற்கான பழியைப் போடுகிறார். ஆனால் உண்மையில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் எண்ணப்படியே நாடு பிரிந்தது.  ஆர்.என்.ரவிக்கள் தலைகீழாக நின்றாலும், காந்திஜி என்கிற புகழையும், நேதாஜி என்ற பெரு மையையும் ஆர்எஸ்எஸ்காரர்களால் களவாட முடியாது. காந்தியின் புகழை மறைப்பதற்காக நேதாஜியை முன்னிலைப்படுத்தினாலும் இவர் களது எண்ணம் ஈடேறாது.  பல நாடுகளிலும் சுதந்திரப் போராட்ட தலை வர்களுள் மிகவும் புகழ்பெற்ற ஒருவரை தேசத் தந்தையாக சிறப்பிப்பது உண்டு.

அந்த அர்த்தத் தில் மகாத்மா காந்தி தேசத் தந்தைதான் என்பதை பாஜகவினர் போன்ற இந்து தேசியவாதிகள் தவிர மற்ற அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று கம்யூனிஸ்ட் தலைவரும் வரலாற்று அறி ஞருமான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முன்பு கூறிய வார்த்தைகளே ஆளுநர் ரவிக்கு தக்க பதிலாகும்.