headlines

img

பியூஷ் கோயலின் இழிவான உத்தி

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முடிவின்படி, மோடி அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் மிகத் தீவிர மாக ராமர்கோவில் திறப்பு விழா பிரச்சாரத்தை  கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே, சென்னையில் ஞாயிறன்று துவங்கிய தமிழ்நாடு அரசின் நிகழ்ச்சியான உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்த மாநாட்டிற்கு சற்றும் தொடர்பில்லாத  வகையில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்புவிழா நடைபெறுவதைப் பற்றி பேசினார்.

“500 ஆண்டுகள் போராட்டத் திற்குப் பின்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 22 அன்று திறப்புவிழா நடைபெறுகிறது. அதை நாட்டு  மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்” என்று பியூஷ் கோயல் தனது உரையில் தெரிவித்தார்.  அடுத்த மூன்று மாத காலத்திற்கு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை ராமர் கோவில்  பிரச்சார நிகழ்ச்சியாக மாற்றுவது என ஆர்எஸ் எஸ்-பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சில கேபினட் அமைச்சர்கள், பாஜக முத லமைச்சர்கள், அக்கட்சியின் மாநில தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்துள்ளது. இக்கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் 400க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றுவது என இலக்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பிரச்சார மையப்பொருளாக ராமர்  கோவில் என்பதை மட்டுமே வலுவாக முன்னி றுத்துவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. ஜனவரி 22 அன்று ராமர்  கோவில் திறப்புவிழா நிகழ்ச்சியை நாடு தழுவிய அளவில் மிக முக்கியமான நிகழ்வாக மாற்றும் வேலையில் ஒட்டுமொத்த ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டம் இறங்கியிருக்கிறது.

 ஜனவரி 25ல் துவங்கி அடுத்த 60 நாட்களுக்கு - அதாவது மக்களவைத் தேர்தல்  வரையிலும் முழுக்க முழுக்க ராமர்கோவில் பற்றிய பிரச்சாரம், நாட்டின் அனைத்து பகுதிகளி லிருந்தும் ராமர் கோவிலுக்கு பக்தர்களை இலவசமாக அழைத்துச் செல்வதற்கான விரிவான ஏற்பாடுகள், நாடு முழுவதும் கோவில்கள் அனைத்திலும் ராமர்கோவில் திறப்புவிழா நிகழ்வுடன் இயைந்த நிகழ்ச்சி களை நடத்துவது, மேலிருந்து கீழ் வரை அனைத்து ஆர்எஸ்எஸ் - பாஜக நிர்வாகிகள் ராமர் கோவிலைப் பற்றி மட்டுமே மிகத் தீவிர மாக பேசுவது என்று மேற்கண்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பியூஷ் கோயல்  தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ மாநாட்டி லேயே அந்தப் பிரச்சாரத்தை துவக்கிவைத்துள் ளார். அவரது செயல் முற்றிலும் அரசியல் சட்ட விரோதமானது. வன்மையாகக்கண்டிக்கத்தக்கது.