headlines

img

உங்களுக்கு அருகதை உள்ளதா?

“பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்கமுடியாத பெரும் பாவம்” என்று திருவாய் மலர்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நடைபெற்ற “லட்சாபதி சகோதரி சம்மேளன” நிகழ்வில்தான் இந்தியாவின் தாய்மார்களையும் சகோதரிகளையும் மகள்களையும் பற்றி திடீரென கவலைப்பட்டிருக்கிறார் பிரதமர். பெண்களின் கண்ணியம் மற்றும் உயிர்களைப் பாதுகாப்பது அரசு மற்றும் சமூகமாக நம் அனைவரின் பொறுப்பாகும் எனவும் அவர் கூறியிருக்கிறார். 

மேற்குவங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவம்  அம்மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி, போராட்ட அலைகளை உருவாக்கியுள்ளது. அங்கு திரிணா முல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. எனவே அச்சம்பவத்திற்கு எதிராக மேற்குவங்கத்தில் பாஜகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான், பிரதமர் நரேந்திர மோடி  பெண்களின் பாதுகாப்பு பற்றி அக்கறைப் பட்டிருக்கிறார். 

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை சம்பவம் மிகவும் கொடூரமானது; திரிணாமுல் அரசு இப்பிரச்சனையிலிருந்து தனது பொறுப்பினை கைகழுவ முயல்கிறது. தனது அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் சதி செய்கின்றன என்று முத லமைச்சர் மம்தா பானர்ஜி கூப்பாடு போடுகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

ஆனால் அதேவேளையில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் நடந்துள்ள சம்பவத்தை மட்டுமே மையப்படுத்தி பிரதமர் மோடி பெண்கள் மீது அக்கறைப்படுவது, திட்டமிட்ட திசை திருப்பும் முயற்சி மட்டுமல்ல; நாடு முழுவதும் அனுதினமும் பெண்கள் மற்றும் பெண் குழந்தை கள் மீது எண்ணற்ற கொடிய தாக்குதல்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் புறந்தள்ளு வதும் ஆகும்.

மணிப்பூர் பற்றி எரிந்த போதும்; மணிப்பூரின் மகள்கள் பல நூற்றுக்கணக்கானோரால் கொடூர மாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட போதும் இந்த பிரதமர் எங்கே இருந்தார் என்று தெரியவில்லை. இவரது சொந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன், இந்தியாவின் மகத்தான மகள்களான மல்யுத்த வீராங்கனைகளை மிக மோசமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய போது இதே பிரதமர் தனது முகத்தை எங்கே வைத்துக் கொண்டிருந்தார்?

கர்நாடகாவில் இவரது கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.பி.யாக இருந்த பிரிஜ்வால் ரேவண்ணா, பெண்களுக்கு எதி ராக பாலியல் வன்கொடுமைகளை நடத்திக் கொண்டிருந்த போது அவரோடு புகைப்படத்திற் காக போஸ் கொடுத்தவர் தானே இந்தப் பிரதமர்? இந்தியாவின் மகள்களைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை, மோடி அவர்களே!