பல்கலைக்கழகங்கள் நடத்த வேண்டிய அனைத்து இறுதித் தேர்வுகளையும் ஆன்லைன் மூலமாக நடத்தியே தீரவேண்டும் என்று பல் கலைக்கழக மானியக்குழு நிர்ப்பந்தம் செய்வது முற்றிலும் அநீதியானதாகும். இவ்வாறு இறுதித் தேர்வுகளை நடத்தாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை மிரட்டிய பின்ன ணியில் தான் பல்கலைக்கழக மானியக்குழு இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அவசர நிலை காலத்தின்போதுதான் கல்வி என்பது மாநில பட்டியலிலிருந்து பொதுப் பட்டிய லுக்கு மாற்றப்பட்டது. ஆனால் நடைமுறை யில் கல்வித்துறையை, குறிப்பாக உயர்கல்வித் துறையை மத்திய அரசு கபளீகரம் செய்து கொண்டது. இதன் காரணமாகத்தான் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை மாநிலங்க ளின் தலையில் நிர்ப்பந்தமாக மத்திய அரசால் சுமத்த முடிகிறது. நீதித்துறையும் இதற்கு துணை போகும் நிலை உள்ளது.
இப்போது பல்கலைக்கழக இறுதித் தேர்வுக ளை நடத்தியே ஆக வேண்டும் என்று மிரட்டும் மத்திய அரசு, கல்வி பொதுப் பட்டியலில்தான் இருக்கிறது என்பதை மாநில அரசுகள் மறந்து விடக்கூடாது என அச்சுறுத்துவதோடு, பல்கலைக்கழகங்கள் மானியக்குழு மூலம் நிதி பெறுவது உட்பட சிக்கலுக்குள்ளாகும் என்று கூறியுள்ளது.
இந்த அடாவடிப் போக்கு காரணமாகவே கல்வியை முற்றாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வு கள் நடத்துவது குறித்து மாநிலங்கள் நிலைமைக் கேற்ப முடிவு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உட்பட பல்வேறு மாநில அரசுகள் கடிதம் எழுதியுள்ளன.
சில மாநிலங்கள் தேர்வு நடத்துவதற்கான காலத்தை மாநிலத்தின் கொரோனா பரவல் நிலைமைக்கேற்ப முடிவு செய்து கொள்வதாக கோருவதையும் கூட ஏற்க மறுத்து குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று நிர்பந்திப்பது நியாயமல்ல. அதிலும் இணைய வழி மூலம் நடத்த வேண்டும் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல.
ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்தே விவாதங்கள் நடந்து வரும் நிலையில் அடுத்தக் கட்டமாக ஆன்லைன் தேர்வு என மாணவர்கள் மீது திணிப்பது எதார்த்தத்திற்கு பொருத்தம் இல்லாதது. எனவே அனைத்து மாநிலங்களை யும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
அனைத்து மாணவர்களுக்கும் இணையத் தொடர்பு என்பது சாத்தியமில்லாத நிலையில் அவர்களது எதிர்காலத்தில் மண் அள்ளிப்போ டும் உத்தரவை பல்கலைக்கழக மானியக்குழு திரும்பப் பெற வேண்டும். மாநிலங்கள் தங்களு டைய அடிமைகள் போலவும், மத்தியிலிருந்து வரும் உத்தரவுகளை மறுப்பின்றி நிறைவேற்ற வேண்டுமென்றும் நினைக்கிற மனநிலையி லிருந்து மோடி அரசு விடுபட வேண்டும்.