உங்களுக்கு உத்தரவாதம் யார்?
பீகார் தேர்தலையொட்டி பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந் தால் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவோம் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பீகார் இளைஞர்கள் வேலைக்காக வெளி மாநிலம் செல்லும் நிலை மை மாறும் என்றும் இது எனது உத்தரவாதம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2014 முதல் பிரதமரே நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் ஏதாவது நிறைவேற்றப்பட் டுள்ளதா? நான் பிரதமரானால் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வழங்கப்படும் என்றீர். இந்த வாக்குறுதி உங்களால் நிறைவேற்றப்பட்டி ருந்தால் இதுவரை 22 கோடிப் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாக்குறுதி அதோகதியானது.
விவசாயிகளின் விளைபொருளுக்கு உற் பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு விலை வழங்கப்படும் என்று கூறியது நீர்மேல் எழுத்துப் போலாகிவிட்டது. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கில் அப்போதைய நிதிய மைச்சர் அருண்ஜெட்லி தேர்தல் வாக்குறுதி கள் எல்லாம் நிறைவேற்றப்படுவது கட்டாயம் இல்லை; அவை வெறும் தேர்தல் வாக்குறுதி கள்தான் (ஜூம்லா) என்று நாநடுங்காமல் கூறி யதை நாடறியும்.
கருப்புப்பணத்தை கண்டுபிடித்து ஒவ்வொரு வர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப் படும் என்று கூறியது அப்படியே காற்றில் கலந்து விட்டது. பணமதிப்பிழப்பு செய்யும் போது கருப்புப் பணம் முற்றாக ஒழிக்கப்பட்டு விடும் என்று கூறினீர்கள். ஆனால் நாட்டு மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கே ஏடிஎம் வரிசை யில் நின்று உயிரைவிட்டது தான் மிச்சம். ஆனால் பின்னர் பாஜகவுக்கு தேர்தல் பத்தி ரங்கள் மூலம் வசூல் தான் நடந்தது.
பாஜக கூறிய தேர்தல் வாக்குறுதிகளில் எவை எவை நிறைவேற்றப்பட்டது என்றால் ஆர்எஸ்எஸ் - அஜண்டாவான அயோத்தி ராமர் கோவில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து (370) ரத்து டன் மாநிலத்தையே கூறு போட்டது, பொது சிவில் சட்டம் (உத்தரகண்ட் மாநிலத்தில்) ஆகி யவை தான். இவை யாவும் ஆர்எஸ்எஸ்க்கு கொடுத்த வாக்குறுதிகள். ஆனால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எதுவுமே நிறைவேற் றப்படவில்லையே. நாட்டு மக்கள் இன்னுமா உங்களது வாக்குறுதிகளை நம்புவார்கள் என்று நினைக்கிறீர்கள்?
பீகார் மாநிலத்தில் உங்களது ஒத்துழைப் போடு இப்போது நடக்கும் ஆட்சிக்கு ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆகிறது. பீகார் மாநில இளைஞர் கள் பிழைப்புக்காக வெளி மாநிலங்கள் செல்வ தைத் தடுக்க என்ன செய்தது? கொரோனா காலத்தில் சொந்த மண்ணுக்குத் திரும்பியவர்க ளை பசி, பட்டினியால், போக்குவரத்து வசதி செய் யாமல் உயிரைத் தானே வாங்கியது. இந்நிலை யில் தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுகிறார் கள் என்று உங்களால் வீண்பழி சுமத்தியதைத் தவிர வேறென்ன செய்ய முடிந்தது? உங்களது வாக்குறுதியை யார் நம்புவார்? அதற்கு யார் தரு வார் உத்தரவாதம்?
