மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் அரசாங் கத்தின் மூன்று நாள் அதிசயக்கூத்து இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இத்தகைய இழிந்த நிகழ்வுகளிலிருந்து என்னவித மான படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை ஒருவர் திரும்பிப் பார்த்திட வேண்டும்.
நவம்பர் 23 அன்றிரவும், 24 அன்று காலையும் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் நம் அரச மைப்புச் சட்டத்தின் மீதும், ஜனநாயக மாண்பு களின் மீதும் மிகவும் கேவலமான முறையில் ஏவப்பட்ட தாக்குதல்களாகும். இதில் நமக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்திய விஷயம் என்ன வென்றால், இத்தகு இழி நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் வேறு யாருமல்ல, நாட்டின் அரசமைப்புச்சட்டத்தின் உயர் அதிகாரமையங்க ளாக விளங்குபவர்களான – ஆளுநர், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் – ஆகியோரே இத்தகு இழிசெயல்களில் ஈடுபட்டவர்கள். இவர்கள் அனை வரும், அரசமைப்புச்சட்டத்தின் நெறிமுறைக ளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, பாஜகவின் கட்டளைக்கிணங்கவும், மத்திய ஆளும் கட்சியின் நலன்களுக்காகவும், இவ்வாறு செயல்பட்டிருக்கி றார்கள்.
தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் அஜித் பவார் அளித்த ஒரு போலி ஆதரவு கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆளுநர் பகத் சிங் கோஷியாரி தன் கட்சியின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தன் ஆளுநர் அலுவலகத்தைத் துஷ்பிரயோகம் செய்து, தேவேந்திர பட்னாவிசுக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் இவர் அன்று நள்ளிரவு குடியரசுத் தலைவர் ஆட்சி யை நீக்க வேண்டும் என்கிற பரிந்துரையுடன் இதனைச் செய்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, காலையில் 5.47 மணியளவில் அமைச்ச ரவைக் குழுவின் ஒப்புதல் இல்லாமலேயே குடியர சுத் தலைவர் ஆட்சியை நீக்குவதற்கு ஒப்புதலை அளிக்கிறார். இதற்காக அவர், அவசர நிலை ஏற்படும் சமயங்களில் மேற்கொள்ளப்படும் இந்திய அரசு (வர்த்தகப் பரிவர்த்தனை) விதி களின் கீழ் இதனைச் செயல்படுத்துகிறார். பிரதமர் எவ்விதமான மனச்சங்கடமுமின்றி நள்ளிரவு அரசியல் சதியை அரங்கேற்றிட இவ்விதி யைப் பிரயோகிக்கிறார். இறுதியாக, குடியரசுத் தலைவரும், குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்குவது தொடர்பாக உரிய நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதாகத் தனக்குத் தானே எவ்விதத் திருப்தியும் கொள்ளாமலேயே குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கி கையெ ழுத்திடுகிறார். இவை அனைத்தும், ஆட்சி அமைப்பதற்கு மிகவும் தெளிவான முறையில் பெரும்பான்மை யைப் பெற்றிருந்த, சிவசேனை-தேசியவாதக் காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியின்கீழ் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளை அளிக்காது அவற்றை முன்கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்பட்டன.
அரசமைப்புச் சட்டத்தின் மீதும், நாடாளு மன்ற ஜனநாயகத்தின் மீதுமான தாக்குதல்கள் இத்துடன் நின்றுவிடவில்லை. பாஜக, தன்னு டைய இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கை கள் வெற்றிபெறும் என எப்படி இந்த அளவிற்கு நம்பிக்கையுடன் இருந்தது? தன்னிடம் உள்ள பண பலமும், அரசியல்வாதிகளை மிரட்டிப் பணிய வைத்திட முடியும் என்கிற நம்பிக்கையும்தான் தங்க ளுக்குத் தேவையான அளவிற்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை வென்றிட முடியும் என்கிற மூர்க்கத்தனமான நம்பிக்கையை அதற்கு அளித்தி ருந்தது.
மகாராஷ்டிரா நிகழ்வுகள், எந்த அளவிற்கு பாஜக பண பலத்தையும் அரசாங்கத்தின் கீழ் இயங்கிடும் உளவு ஸ்தாபனங்களைக் கொண்டு அரசியல்வாதிகளை மிரட்டிப் பணியவைத்திட முடி யும் என்கிற நம்பிக்கையையும் கொண்டிருந்தது என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றன. இதற்கு, அஜித் பவார் கட்சி தாவிய நடவடிக்கை மிகவும் மோசமான சாட்சியமாகும். அவர் துணை முதல்வ ராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட 48 மணி நேரத்திற்குள்ளாகவே நீர்ப்பாசன ஊழல்கள் தொடர்பாக அவருக்கு எதிராகப் போடப்பட்டி ருந்த ஒன்பது வழக்குகளில் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளி லிருந்தும், ஊழல் தடுப்பு பிரிவால் (Anti-Corrup tion Bureau) அவர் விடுவிக்கப்பட்டார். முன்ன தாக, தேவேந்திர பட்னாவிஸ், எதிர்க்கட்சி எம்எல்ஏ-வாக இருந்த சமயத்தில், 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலுக்குப் பின்னே இதன் தலைவனாகச் செயல்பட்டது இந்த பவார்தான் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். தேசியவாதக் காங்கிரசின் ஒவ்வொரு எம்எல்ஏ-க்கும் அபரி மிதமான தொகையை அளித்திட பாஜக தயாராக இருந்தது என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
சென்ற ஆண்டு கர்நாடகாவிலும் இதே போன்று பாஜகவிற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. அப்போது அங்கே கர்நாடக முதலமைச்சராக எடி யூரப்பாவை தன்னுடைய ஆளுநரை வைத்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தது. எனினும் உச்சநீதிமன்றம் 24 மணி நேரத்திற்குள் சட்டமன்றத் தைக் கூட்டி பெரும்பான்மையை மெய்ப்பிக்க வேண்டும் என்று கட்டளையிட்டதைத் தொடர்ந்து எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.
இவையெல்லாம் பாஜகவையோ அல்லது அதன் தலைவர் அமித் ஷாவையோ தண்டித்தி டாது என்பது வெளிப்படை. மீண்டும் பெரிய அளவில் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபின்னர், அமித்ஷா உள்துறை அமைச்ச ரான பின்னர், மேலும் பல அசிங்கமான உத்திக ளைக் கையாள தைரியம் வந்திருக்கிறது. ஆனா லும், இவரின் இத்தகைய துடுக்குத்தனங்கள் அவ மானகரமான முறையில் படுவீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
உச்சநீதிமன்றம், அடுத்த நாளே சட்டமன்றத் தைக் கூட்டிப் பெரும்பான்மையை மெய்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது, அரச மைப்புச்சட்டத்திற்கு விரோதமான முறையில் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவமற்றிருந்த அர சாங்கமாகிய பலூனில் ஓட்டையைப் போட்டு புஸ்வானமாக்கிவிட்டது. ஜனநாயகம் மற்றும் அர சமைப்புச் சட்டத்தின் மாண்புகளைக் காப்பாற்றும் விதத்தில், இந்த நிகழ்வினை முழுமையாக அலசி ஆராய்ந்துபார்த்து, இதற்குக் காரணமான கயவர்க ளைச் சுட்டிக்காட்டிட வேண்டும்.
நாட்டு மக்களைப் பொறுத்தவரைக்கும், மகா ராஷ்டிரா முறையற்ற செயல்பாடுகள், பாஜக மற்றும் அதற்குத் தலைமை தாங்கும் ஆர்எஸ்எஸ்- இன் ஜனநாயக விரோத, எதேச்சதிகார குணத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். புதிதாக உத்தவ் தாக்கரே தலைமையில் அமைந்துள்ள புதிய அரசாங்கம் மூன்று கட்சி கூட்டணியால் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுக் குறைந்தபட்ச திட்டத்தின்கீழ் செயல்பட வேண்டும். மகாராஷ்ட்ர மக்கள் இதைத்தான் இவர்க ளிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். அரசாங்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் இடையே பல்வேறு எதிரெதிர் சிந்தனைகள் இருப்பதால் இது மிகவும் முக்கியமாகும்.
(நவம்பர் 27, 2019)
தமிழில்: ச.வீரமணி