headlines

img

நெரிக்கப்படும் ஜனநாயக குரல்வளை

நெரிக்கப்படும்  ஜனநாயக குரல்வளை

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதில் ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மருக்குப் போட்டி யாக இந்தியா மாறியிருக்கிறது. மோடி அரசின் கீழ் இந்தியாவில் இணைய முடக்கங்கள் மற்றும்  தகவல் கட்டுப்பாடுகள் வரலாற்றில் முன்னெப்போ தும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளன. குறிப் பாக கடந்த 6 ஆண்டுகளாக  ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாடுகளில் இணைய முடக்கத்தில் இந்தியா முதலிடத்தை வகித்து வருகிறது. 

‘அக்சஸ்நவ்’ அமைப்பின் ஆய்வறிக்கைப்படி கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 84 முறை இணையம் முடக்கப்பட்டிருக்கிறது. அதே  நேரம் ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் 85 முறை இணையம் முடக்கப்பட்டிருக்கிறது. ஜன நாயகத்தின் பேரில் இந்தியாவில் எதேச்சதிகார  ஆட்சி நடைபெறுகிறது என்பதையே இந்த ஆய் வறிக்கை  உறுதிப்படுத்துகிறது.

அதே போல் ஜனநாயக குறியீட்டில் இந்தியா 167 நாடுகளில் 111 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டி ருக்கிறது. குறிப்பாக அரசியல் சுதந்திரம், ஊடக சுதந்திரம், தேர்தல் நடைமுறைகள், குடிமக்களின் உரிமைகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்என்ற நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. இதில் ஜனநாயகத்திற்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றிருக்கிறது. 

இந்திய அரசியலமைப்பு 19(1) சட்டக்கூறு, குடி மக்களுக்கு பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம்  மற்றும் தகவல்களை அணுகும் உரிமையை உறு திப்படுத்துகிறது. ஆனால், இணைய முடக்கங்கள் இந்த உரிமைகளை நேரடியாக மீறுகின்றன. குறிப் பாக, பொது விவாதங்களில் மக்கள் பங்கேற்கும் உரிமையை அடக்குவது, அரசு நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்யும் உரிமையை தடுப்பது ஆகியவை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப் படை நோக்கத்தை மீறுவதாகும்.

அடிப்படை உரிமைகளை மட்டுமல்ல, அரசி யல் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் மோடி அரசு இணைய முடக்கங்களைப் பயன்படுத்தி வருகி றது. தகவல் பரிமாற்றத்தை கட்டுப்படுத்துவது பாசிச மனப்பான்மையின் வெளிப்பாடாகும். இதன் மூலம் ஜனநாயக உரிமைகள் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. 

இணைய முடக்கத்தினால் 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் ரூ.16,597 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், 21,000 வேலை கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. அந்நிய முதலீட்டில் ரூ.1,030 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் மோடி அரசு முன்வைக்கும் டிஜிட்டல் இந்தியா வின் உண்மையான முகம். 

இதில் மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், ஹரியானா போன்ற மாநிலங்களில் மக்களின் அடிப்படை உரிமைகள், பொருளாதாரம் மற்றும் கல்வி கால வரையின்றி பாதிக்கப்படுகின்றன. இது “பாது காப்பு நடவடிக்கை” அல்ல; அரசியலமைப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறி, ஜனநாயகத்தை அரிக்கும் நவீன பாசிசப் போக்கின் அடையாள மாகும்.