headlines

img

‘கௌரவக் கடன்காரர்கள்’

அண்மையில் “வோடோபோன் ஐடியா” மற்றும் “பாரதி ஏர்டெல்” நிறுவனங்களுக்கு முறையே ரூ.15000 கோடி மற்றும் ரூ.7000 கோடி வங்கி பிணைகளை ஒன்றிய அரசின் தொலை தொடர்புத் துறை திரும்ப அளித்ததாக செய்தி கள் வெளியானது.

வங்கிப் பிணைத் தொகை என்பது ஒரு நிறுவனம் வாங்கும் பொருளுக்கு அல்லது ஒப்புக் கொண்ட பணிக்கு தொகையைச் செலுத்த வில்லை என்றால் வங்கி அதைச் செலுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது என்று புரிந்து கொள்ளலாம். 

வோடபோன் மற்றும் ஏர் டெல் நிறுவனங்கள் 2012, 2013, 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அலைக்கற்றைகளை ஏலம் எடுத்தன. அதற்கு ‘ஒளிக்கற்றைக் கட்டணம் மற்றும் வருவாய் அடிப்படையிலான கட்டணம்’ என இரண்டு வகை கட்டணங்கள் செலுத்த வேண்டும். இதை 2020 வரை செலுத்தவில்லை. இது நீதிமன்ற வழக்காகி உச்சநீதிமன்றம் அதை உடனடியாக செலுத்த உத்தரவிட்டது. பிறகு அரசே அவற்றிற்கு நான்கு ஆண்டுகள்   தள்ளிவைப்பு அளித்தது. செலுத்த வேண்டிய தொகையை 10 ஆண்டு தவணைகளில் செலுத்தலாம் என்றும் பாசத்தைப் பொழிந்தது. 

செலுத்தாத தொகைக்கான வட்டியை அந்த  நிறுவனங்களின் பங்குகளாக மாற்றிக் கொள்ளவும் சம்மதித்தது. வோடோபோனின் கடன் ‘அதிகம்’ இல்லை! 1 இலட்சம் கோடிக்கு மேல்தான். அந்த நிறுவனத்தில் தான் பங்கு களை வாங்கியுள்ளது ஒன்றிய அரசு?

ஆகவே இப்போதைக்கு அந்த நிறுவனங்களி டமிருந்து தொகை பாக்கி  எதுவும் இல்லை என்ற முறையில் தான் பெற்ற வங்கி பிணையை திரும்ப அளித்துள்ளதாம். எதிர்காலத்தில் அதாவது 2025இலிருந்து பத்து ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகையில் வங்கிப் பிணை 20% இருந்தால் போதும் என்றும் சலுகை அளித்துள்ளது. 

மின்கட்டணம் செலுத்தாவிட்டால் பீஸ் கட்டையை பிடுங்குவது, போன் கட்டணம் செலுத்தவில்லை என்றால் இணைப்பை தண்டிப்பது, டிராக்டர் வாங்கிய விவசாயி வீட்டிற்கு குண்டர்களுடன் வந்து அவமானப் படுத்தி தற்கொலை செய்ய வைப்பது, பள்ளிக் கட்டணம் செலுத்தாத மாணவரை சாதி பேரைச்  சொல்லி திட்டி தற்கொலை செய்ய வைப்பது... இந்த செய்திகளையெல்லாம்  வோடோபோன் - ஏர்டெல்லோடு நாமாக ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது! மக்களின் சேமிப்புகள் இப்படி சூறை போகிறது என்று புலம்பக் கூடாது!

இவர்கள் பிரதமர் வார்த்தைகளில் ‘செல்வத்தை உருவாக்குபவர்கள்.’

தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களான வோட போனுக்கும், ஏர்டெல்லுக்கும் இந்த சலுகை களை வாரி வழங்கியுள்ள ஒன்றிய ஆட்சியாளர் கள்தான், மக்களின் சொத்தான பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒழித்துக்கட்டும் வேலையை தீவிரப்படுத்தியுள்ளனர். கார்ப்ப ரேட் சேவகர்கள்தான் ஒன்றிய ஆட்சியில் உள்ள மதவெறியர்கள் என்பது ஒவ்வொரு நகர்விலும் உறுதிப்படுகிறது.