கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் பிரதமர் நரேந்திரமோடியும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முன்னின்று வெறுப்பு அரசியலை பரப்பி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகளை தடை செய்வோம் என்று கூறியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி அனைத்து பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இதை மட்டும் பிடித்துக்கொண்டு அது குறித்தே பேசி வருகிறார்.
பஜ்ரங்தளம் என்பது ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களில் ஒன்று. பாபர் மசூதி இடிப்பு போன்ற பல தருணங்களில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதை திசை திருப்பி, அனுமார் பக்தராக பாஜகவினர் வேடம் போடுகின்றனர். பிரதமர் நரேந்திரமோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக வாக்கா ளர்கள் வாக்களிக்கும் போது ‘ஜெய் பஜ்ரங்கபலி’ என்று சொல்லி வாக்களிக்குமாறு தேர்தல் விதிக ளுக்கு மாறாக பேசியுள்ளார்.
கர்நாடகத்தில் ஆளும்கட்சியான பாஜக தங்களது சாதனைகள் என்று எதையும் சொல்ல முடியவில்லை. ஒப்பந்தங்களுக்கு 40 விழுக்காடு கமிசன் கேட்டது தான் அவர்களது ஒரே சாதனை. அது கர்நாடக மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதைக் கூறுவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்பது சிறு பான்மை மக்கள் மீது அபாண்டமான அவதூறு களை சுமத்துவது என்பது தான் பாஜகவின் தேர்தல் உக்தியாக உள்ளது.
விதி மீறிய பிரதமரின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் மௌனம் சாதிக்கிறது. மத உணர்வு களைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது என தேர்தல் விதிகள் கூறும் நிலையில் பிரதமரிடம் விளக்கம் கேட்கக்கூட தேர்தல் ஆணையம் தயாராக இல்லை.
அண்மையில் குஜராத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இத்தகைய வெறுப்பு அர சியலைத்தான் பாஜக மேற்கொண்டது. உ.பி. தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் இது இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையி லான யுத்தம் என்று வெளிப்படையாகவே வெறி யூட்டிப் பேசினார்.
வெறுக்கத்தக்க வகையில் பேசுபவர்களுக்கு எதிராக மாநில அரசுகள் தானாக முன்வந்து வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித் தது. ஆனால், பிரதமர் மீது கர்நாடக பாஜக அரசு வழக்கு தொடுக்காது என்ற போதும் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டிருப்பது முறையல்ல.
இந்து மதத்திற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் பெரும்பகுதி இந்து மக்களுக்கு எதிரான கட்சியாக உள்ளது பாஜக. எனவே, கர்நாடக வாக்காளர்கள் இதை மனதில் கொண்டு பாஜகவை தோற்கடித்திட வேண்டும்.