நான்கு மாதங்களுக்கு மேலாக மணிப்பூர் மாநிலத்தின் அமைதி, சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்து குக்கி பழங்குடி மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் முகாம்களில் தங்கியிருக்கும் அவலம் தொடர்கிறது.
மணிப்பூரில் நடந்தது என்ன என்பது பற்றிய உண்மைகளை வெளிக்கொணர தில்லியில் இருந்து எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு மூவர் குழுவை அனுப்பியது. அது தனது அறிக்கையை செப்டம்பர் 2 அன்று வெளியிட்டதைத் தொடர்ந்து மாநில பாஜக அரசின் காவல்துறை, குழுவில் இருந்த மூவருடன் எடிட்டர்ஸ் கில்டு தலைவரை யும் சேர்த்து, உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்ட 66ஏ, தேசத்துரோகம், மோதலைத் தூண்டும் முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு உச்சநீதிமன்றம் சென்றது. செப்டம் பர் 15 வரை கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை யில் காணப்பட்ட உண்மைகள் மணிப்பூர் பாஜக அரசைச் சுட்டுவிட்டது. இணையத்தடை 15 நாட்க ளுக்கு மேல் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதி மன்றம் ஒருவழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் மணிப்பூரில் 100 நாட்களுக்கு மேல் இணைய சேவை தடை செய்யப்பட்டது. அதனால் ஊடகத்துறையில் செய்திகள் அனுப்புவதும், அதனை சரிபார்த்து பிரசுரிப்பதும் பாதிக்கப் பட்டது. மணிப்பூர் ஊடகங்கள் ‘மெய்த்தி’ ஊடக மாகப் போய்விட்டது, குக்கி செய்தியாளர்கள் செய்தி அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டதால், இதுவும் வன்முறையும் மோதலும் தொடர்வ தற்கு காரணமாக அமைந்துவிட்டது. இணையத் தடையிலிருந்து ஊடகத்துக்கு விதிவிலக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று எடிட்டர் ஸ்கில்டு கூறியது.
அத்துடன் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடித்த காவல்துறை அதி காரியை நிர்பந்தித்து வழக்கை கைவிடச் சொன்ன பிரச்சனையில் முதல்வரின் தொடர்பு இருந்தது என்பதையும் குழுவின் அறிக்கை சுட்டிக் காட்டியது. இதுபோன்ற பல உண்மைகள் வெளி உலகத்துக்கு தெரிந்திடக் கூடாது என்ப தற்காகவே இந்தக் குழு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூரின் துயரம் தொடர்வதற்குக் கார ணம் பாஜக அரசின் மதரீதியான பாரபட்சமான அணுகுமுறையே. குக்கி பழங்குடி மக்கள் துணை ராணுவப் படை இருப்பது தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்கின்றனர். ஆனால் மாநில அரசோ அதன் மீது குறை கூறுகிறது என்பதே அரசின் நிலை எத்தகையது என்பதை தெளிவுபடுத்தும்.
உலக நாடுகளில் ஊடக சுதந்திரத்தில் கடைசி இடத்துக்கு போட்டியிடும் நிலையிலி ருக்கும் ஒன்றிய பாஜக அரசு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.மணிப்பூர் பிரச்சனையில் உண் மையை வெளிக் கொணர்ந்திட முயற்சித்த எடிட்டர்ஸ் கில்டு மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும். மணிப்பூரில் அமைதி ஏற்பட ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும்.