headlines

img

கேலிக்கூத்தாக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொள்ளப் பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக  திட்டமிடப்பட்டதை விட முன்னதாகவே அவை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. 

கடந்த கூட்டத்தொடரின் போது புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப் பினர்கள் 12 பேரை இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக அறிவிக் கப்பட்டது. பல்வேறு சட்ட முன்வரைவுகளை விவாதமின்றியும், பெரும்பான்மை அடிப்படை யிலும் நிறைவேற்றுவதற்காகவே ஒன்றிய பாஜக கூட்டணி அரசு இந்த முடிவை எடுத்தது என்ற குற்றச்சாட்டை நிராகரித்துவிட முடியாது. 

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற மசோதாவின் சட்ட முன் வடிவின்மீது தங்களது கருத்தை தெரிவிக்க எதிர்க்கட்சிகளு க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு விவாதமின்றி சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. 

ரகசிய வாக்கெடுப்பு முறைக்கு வேட்டு வைக்கக்கூடிய முறையில் வாக்காளர் அடை யாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த சட்டமுன்வடிவு மீதும் விவாதத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பல முக்கியமான தேர்தல் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலை யில் அவசர அவசரமாக இந்த சட்ட முன் வடிவை மட்டும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? தன்னுடைய குறுகிய மதவாத அரசிய லின் அடிப்படையில் வாக்காளர்களை குறிவைத்து பிரிக்கவே பாஜக தலைமையிலான அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது என்பது தெளிவு.

ரகசிய வாக்கெடுப்பு முறைக்கு வேட்டு வைக்கக்கூடிய முறையில் வாக்காளர் அடை யாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த சட்டமுன்வடிவு மீதும் விவாதத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பல முக்கியமான தேர்தல் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலை யில் அவசர அவசரமாக இந்த சட்ட முன் வடிவை மட்டும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? தன்னுடைய குறுகிய மதவாத அரசிய லின் அடிப்படையில் வாக்காளர்களை குறிவைத்து பிரிக்கவே பாஜக தலைமையிலான அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது என்பது தெளிவு.

நரேந்திர மோடி தலைமையிலான கடந்த ஏழாண்டு கால ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக் கப்பட்டு வருகிறது. இந்தக்கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் மொத்தம் 48 மணிநேரம் மட்டுமே விவாதம் நடந்துள்ளது. 

தேர்தல் சீர்திருத்த மசோதாவை நாடாளு மன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென்ற  நியாயமான கோரிக்கை கூட நிராகரிக்கப் பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் கொண்டு வரப்படும் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டமுன்வடிவு உட்பட நான்கு மசோதாக்கள் மட்டுமே நிலைக்குழுவின் பரிசீல னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மொத்தத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் போராட்டமெனும் வெப்ப அலையை தாங்க முடி யாமல் அரசு தவித்தது. அதேநேரத்தில் தாம் விரும்பும் சட்ட முன்வடிவுகளை நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறது. இது நல்லதல்ல.