மணிப்பூரில் நிகழும் தொடர்ச்சியான வன்முறை குறித்த எதிர்க் கட்சிகளின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். வன்முறையில் நடை பெற்ற சம்பவங்கள் வெட்கக்கேடானவை. அவற்றை அரசியலாக்குவது அதை விட வெட்கக் கேடானவை என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதனன்று மக்களவை யில் பேசினார்.
மணிப்பூரில் நடைபெற்ற சம்பவங்கள் மட்டுமா வெட்கக்கேடானவை? மாநில, ஒன்றிய அரசுகள்- இரட்டை என்ஜின் ஆட்சிகள்- நடந்து கொண்ட முறைகளும்தான் வெட்கக்கேடா னவை. முதல்வர் பைரேன் சிங்கின் காவல் துறை, மணிப்பூர் சகோதரிகளை கலவரக்காரர்க ளிடம் ஒப்படைத்தது வெட்கக்கேடானது. கொடு மைகளையும் கொடூரங்களையும் மூடி மறைத்து விடலாம் என்றெண்ணி இணைய சேவையை முடக்கம் செய்தது வெட்கக் கேடானது.
2002இல் குஜராத்தில் நடந்த வன்முறை வெறியாட்டங்களை பார்த்துக் கொண்டும் கல வரக்காரர்களுக்கு உதவிக் கொண்டும் இருந்த காவல்துறையின் நடவடிக்கைகளைப் போன்றதுதான் மணிப்பூர் காவல்துறையின் செயல்பாடும். அன்றைய பிரதமர் வாஜ்பாய், எந்த முகத்தைக் கொண்டு வெளிநாடு போவேன் என்று கூறினார். ஆனாலும் முதல்வர் மோடியை பதவி நீக்கம் செய்யவில்லை. அதுபோல இன்று பிரதமர் மோடி, இந்தியாவுக்கே அவமானம் என்று கூறி விட்டு, பிற மாநிலங்களில் நடப்பது போல் தான் இதுவும் என்று நியாயப்படுத்தினார்.
அன்று பிரதமர் வாஜ்பாய் வெளிநாடு போக வில்லை. இன்றோ 56 அங்குல அஞ்சா நெஞ்சர் மோடி அயல்நாடுகள் சென்று வந்தார். அத னால் உலக அளவில் அவப்புகழ்பெற்ற பிரதம ராக இருக்கிறார். 17 மணி நேரம் உழைப்பதாக அமித்ஷா கூறும் மோடிக்கு சில மணி நேரம் கூட மணிப்பூருக்காக ஒதுக்க முடியாத இரும்பு நெஞ்சத்தைத் தான் நாடு கண்டுவிட்டதே.
மே 4 சம்பவம் பற்றி வீடியோ வெளியாகும் வரை அரசு அறிந்திருக்கவில்லை என்பது தான் செயல்படும் அரசா? ஊடகங்களில் பகிராமல் டிஜிபிக்கு அனுப்பியிருந்தால் குற்றவாளிகளை கைது செய்திருக்கலாமே என்று அமித்ஷா கேட்பது, இரட்டை என்ஜின் ஆட்சியின் செய லற்ற தன்மையா? சம்பவங்களை மூடி மறைத்திட முயலும் கொடூர எண்ணமா?
ஒன்றிய அரசு நினைத்தால் ராணுவத்தை அனுப்பி அமைதியை ஏற்படுத்தியிருக்க முடியா தா? பேச்சுவார்த்தைக்குழு அமைத்திருக்கி றோம் என்று கூறுவது வன்முறையாளர்களுக்கு உதவும் செயல் அல்லவா? பழங்குடி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அமைதி திரும்ப வேண்டும் என்று மக்களவை யில் தீர்மானம் நிறைவேற்றுவது தான் திறனுள்ள அரசின் செயலா? மணிப்பூருக்கு இப்போதைய தேவை பிரதமரின் சொல்லும் செயலுமே! இதை எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது அது அரசியலாக்குவதாகாது.