புதிய ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தியின் படத்தையும், மறுபக்கத்தில் இந்தியக் கடவுள்களான லட்சுமி, விநாயகர் ஆகி யோரது உருவங்களையும் சேர்க்க வேண்டு மென்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வைத்துள்ள கோரிக்கை விபரீதமானது, விஷ மத்தனமானது. இத்தகைய உளறல்களை அவர் நிறுத்திக் கொள்வது நல்லது.
குஜராத் சட்டப் பேரவை தேர்தலை மனதில் கொண்டு பாஜகவுக்கு போட்டியாக இந்துத்துவா பிரச்சாரத்தில் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார். மத வெறி கட்சியான பாஜகவுக்கு மாற்றாக மதச் சார்பற்ற கொள்கைகளை முன்னிறுத்துவதற்கு பதிலாக பாஜகவைவிட தன்னை பெரிய இந்துத்துவா சக்தியாக கெஜ்ரிவால் காட்டிக் கொள்ள தொடர்ந்து முயன்று வருகிறார்.
குஜராத்தில் அவர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் ஆம் ஆத்மி கட்சி மக்களுக்காகவும், கடவுளுக்காகவும் பாடுபடு கிறது என்று பேசி வருகிறார். தன்னை அனு மனின் சீடன் என்றும், ஜென்மாஷ்டமி தினத்தில் தான் நான் பிறந்தேன் என்றும் கூறிக்கொள்ளும் கெஜ்ரிவால் பிரச்சாரக்கூட்டங்களில் பாஜகவை போலவே ஜெய்ஸ்ரீராம் என்று கூச்சலிடத் துவங்கியுள்ளார்.
குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி செல்ல விரும்புபவர்களின் மொத்தச் செல வையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் பேசியுள்ளார். கடவுள்தான் தம்மை இந்த பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றெல்லாம் உளறிக் கொட்டும் அவர், ரூபாய் நோட்டுகளில் கடவுள்க ளின் படம் இருந்தால் நாடு செழிக்கும் என்றும் கூறியுள்ளார்.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், அதை சரி செய்ய கெஜ்ரிவால் இந்த யோச னையை முன்வைக்கிறார் போலிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மதங்களை பின்பற்றுப வர்களும் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்க ளும் வாழ்ந்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தில் கடவுள் படங்களை அனைவரும் புழங்கும் ரூபாய் நோட்டில் அச்சிட வேண்டும் என்று கூறுவது இந்தியாவின் அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.
புத்த மதத்தை தழுவுகிற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற தன்னுடைய கட்சியின் அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்து இந்துத்துவா வாதிகளை திருப்திப்படுத்த முயன்றார். ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை மோடி அரசு ரத்து செய்ததை ஆதரித்தவர் கெஜ்ரிவால்.
ஊழல் எதிர்ப்பு போராளியாக காட்டிக் கொண்டு தில்லியில் ஆட்சிக்கு வந்தார்.ஆனால் அவரது ஆட்சியில் ஊழல் தலை விரித்தாடுகிறது என குற்றச்சாட்டு எழுகிறது. இந்த நிலையில், கெஜ்ரிவால் போடும் மித மான இந்துத்துவா வேடம் ஆபத்தானது. இத்தகைய உதிரிகளால் பாஜகவுக்கு ஒருபோதும் மாற்றாக இருக்க முடியாது.