தமிழ்நாட்டை நினைத்தாலே மோடியின் தூக்கம் தொலைந்து விடுகிறது. அதனால்தான் ஒரே மாதத்தில் நான்கு முறை தமிழகத்திற்கு வந்து எல்லா அஸ்திரங்களையும் வீசிப்பார்க் கிறார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக விஷ வித்துக்களை விதைத்தும் பார்த்தார். ஆனால் அவருக்கே ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.
1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு 26 ஆண்டுகள் கழித்து இப்போது மோடி அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? இப்போது தான் முதன் முறையாக கோவை வருகிறாரா? தேர்தல் என்று வந்தாலே மதத்தின் பேரிலும், கடவுளின் பேரிலும் கலவரத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் அடைவதுதான் பாஜகவின் உத்தி. அதை மீண்டும் கோவையில் அரங்கேற்ற பாஜக விரும்பியது. ஆனால் கோவை மக்கள் அதனை முற்றிலுமாக நிராகரித்துவிட்டனர்.
1998 ஆம் ஆண்டுக் குண்டு வெடிப்பைப் பயன்படுத்தி 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கோவையில் பாஜக வென்றது. அதன் பின் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை மக்கள் நிராகரித்தனர். அது இந்த முறையும் தொடரும் என்பதுதான் கள உண்மை.
கோவையில் மோடி நடத்திய ரோடு ‘ஷோ’வில் சின்மயா தனியார் பள்ளி குழந்தை களுக்கு கடவுள் வேடமிட்டு பங்கேற்க வைத்த னர். அரசு உதவி பெறும் சாய்பாபா வித்யாலயா பள்ளி மாணவர்களைச் சீருடையில் நிறுத்தி அர சியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினர். இது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் ஆகும்.
சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி, “இந்தியா கூட்டணியினர் வேண்டு மென்றே இந்து தர்மத்தைத் தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். இந்து மதத்திற்கு எதிராகத் திட்டமிட்டு ஒரு கருத்தியலை உரு வாக்கி வருகின்றனர். இவர்கள் வேறு எந்த மதத்திற்கு எதிராகவும் ஒரு வாரத்தைக்கூடப் பேசுவதில்லை’’ என விஷத்தைக் கக்கியிருக் கிறார் மோடி.
மதத்தின் பெயரால் பிரிவினையை உரு வாக்கப் பகிரங்கமாக முயன்றிருக்கிறார். இது தேர்தல் விதிமுறை மீறல் இல்லையா?
தேர்தல் ஆணையம் பாஜகவுடனான ரகசிய கூட்டணியால், கள்ள மவுனத்தைக் கடைப்பிடிக்கலாம். ஆனால் தமிழக மக்கள் ஒரு போதும் இதனை அனுமதிக்கமாட்டார்கள். பாஜக சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரான கட்சி என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். மோடியின் சூழ்ச்சி ஒரு போதும் தமிழகத்தில் பலிக்காது.