headlines

img

ஊழலை ஒ(ளி)ழிப்பது...

நாட்டில் ஊழலுக்கு எதிராக பெரும் போரை மேற்கொண்டு வருகிறேன் என்று பிரதமர் மோடி ஞாயிறன்று மீரட் நகரில் முழங்கியிருக் கிறார் நகைக்காமல். ஆனால் அவரது பேச்சைக் கேட்டு நம்மால் தான் நகைக்காமல் இருக்க முடி யவில்லை. அத்துடன் இன்னும் கொஞ்சம் மேலே போய், ஊழல்வாதிகள் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் நடவடிக்கை உறுதியாக எடுக்கப் படும் என்றும் நாட்டைக் கொள்ளையடித்த வர்கள் அந்தப் பணத்தை திருப்பித் தந்தாக வேண்டும் என்றும் இதுவே மோடியின் உத்தர வாதம் என்றும் பேசியிருக்கிறார்.

மோடியின் இந்த முழக்கம் சொந்தக் கட்சிக்காரர்களுக்கும் சேர்த்துத் தானா என்ற  கேள்வி எழுவது நியாயம் தானே. முதலில் ரபேல் விமான ஊழலும், பிஎம் கேர்ஸ் வசூலும், தேர்தல் பத்திர வேட்டையும் அவரைத் தானே சுற்றி வரும். அவரது நிழலான அமித்ஷாவின் மகன் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து அடுத்த ஆண்டிலேயே 80.5 கோடி முதல் 16 ஆயிரம் கோடி  வரை சம்பாதித்ததற்கு என்ன பெயர்சொல்வது?

கர்நாடக பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் நிலம், சுரங்கம், பால் வள ஊழல்களுக்கு என்ன நடவடிக்கை? 40 சதவீத கமிஷன் வாங்கியதால் மக்கள் ஆட்சியை அக ற்றினார்களே அது தானே உரிய நடவடிக்கை. ரெட்டி சகோதரர்களின் ரூ.16,500 கோடி ஊழல் என்னாச்சு? ம.பி.யில் சிவராஜ் சிங்  சவுகானின் வியாபம் ஊழல் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கின் ஊழல்  வழக்கின் நிலை என்ன? இப்படி பல்வேறு மாநிலங்களின் ஊழல் வழக்குகள் வரிசை கட்டி நிற்பதற்கு மோடியின் பதில் என்ன?

ஊழல்வாதிகளைவிடமாட்டேன் என்று பிரதமர் கூறுவதன் பொருள் வேறு எந்தக் கட்சி களிலும் இருக்கவிடமாட்டேன் என்பது தானே! 740 எம்எல்ஏக்கள், எம்பிக்கள் - ஊழல் புகாரில் சிக்கியவர்கள் - பாஜகவில் சேர்ந்திருக்கிறார்கள் என்று டெக்கான் ஹெரால்டு பத்திரிகை கூறி யுள்ளது அதைத்தானே காட்டுகிறது.

ஊழல் கறையுடன் பிற கட்சிகளில் இருப்ப வர்களை எல்லாம் தங்கள் கட்சியில் சேர்த்து ‘தூய்மையாக்கி’ ஊழலை “ஒழிப்பது” தான் பாஜ கவின் ஊழல் ஒழிப்பு உத்தரவாதம் என்பது தான் நாடறிந்த செய்தியாகி நாறிக் கொண்டி ருக்கிறதே. இன்னுமா நீங்கள் தரும் உத்தரவாதத் தை மக்கள் நம்புவார்கள் என்று நினைக் கிறீர்கள்? ஊழல் பணத்தை திருப்பித் தந்தாக வேண்டும் என்பது உங்களுக்குத் தானே!

ஹிமந்தா பிஸ்வா சர்மா, சுக்ராம் மகன் அனில்  சர்மா, அசோக் சவாண், நவீன் ஜிண்டால், கீதா  கோடா, கிருபா சங்கர் சிங், முகுல்ராய், சுவேந்து அதிகாரி, தபஸ் ராய், நாராயண் ரானே, அஜித் பவார், பிரபுல் பட்டேல், பேமா காண்டு, சாகன் புஜ்பால் என பலரும் பாஜகவில் கரைந்தும் பாஜக வுடன் இணைந்தும் ஊழலை ஒ(ளி)ழித்திருக் கிறார்கள் என்பது தானே மோடியின் உத்தர வாதம். இந்த நயவஞ்சகத்துக்கும் நடிப்புக்கும் நாட்டு மக்கள் நல்ல பதிலைத் தந்து பாஜக ஆட்சியை அகற்றுவார்கள் என்பது உத்தரவாதம்!