headlines

img

இன்னும் எத்தனை பொய்களை சொல்லப் போகிறீர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் முற்போக்காளர் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டு  எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. மற்றவர்களின் நீதிக்காக தனது கடைசி மூச்சு வரை உழைத்த வரின் குடும்பத்திற்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை.

ஒருவர் படுகொலை செய்யப்பட்டு 8 ஆண்டு கள் ஆன பின்னரும் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரமுடியாத நிலையில் தான் நாட்டின்  நீதித்துறை இருக்கிறது. பன்சாரே வழக்கில் நீதிமன்றத்தில் விசார ணைக்கான தேதியைப் பெறுவதற்கே அவரது வழக்கறிஞர்கள் சட்டப்போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

விசாரணையின் போது நீதிபதி ஒருவர், மாநிலத்தில் பல கொலை வழக்குகள் இருப்ப தாகவும், அத்தகைய வழக்குகளை நீதிமன்றம் கண்காணிக்க முடியாது என்றும் ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

இதுபோன்ற கொலைகள் “அரசியலமைப்புச் சட்டப்படி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை முற்றிலும் ஆபத்தில் ஆழ்த்தும்” என்று விசாரணையின் போது, உயர் நீதிமன்றம் தனது கவலையை வெளிப்படுத்தியது. மேலும், ஒருவரைக் கொலை செய்வதன் மூலம் “எதிர்மறையான கருத்தை அழித்துவிட முடியாது என்றும் சுட்டிக்காட்டியது. இதன் பின்னரும் பன்சாரே படுகொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை.

டாக்டர் நரேந்திர தபோல்கரின் கொலை விவகாரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் அடையாளங்கள் ஆட்சியாளர்களின் நிர்ப்பந்தத்தால் நீண்ட காலமாக அமுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணைகளில் காணப்பட்ட முட்டாள்தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு, தடயவியல் விசாரணைக்காகத் தோட்டாக்களை ஸ்காட்லாந்து யார்டுக்கு அனுப்ப விசாரணை முகமைகள் முடிவு செய்தி ருந்தன. ஆனால் இதுகுறித்து  இரு நாடு களுக்கும் இடையே ஒப்பந்தம் மற்றும் நடைமுறைகள் ஏதும் இல்லாத காரணத்தால் 9 மாதங்களுக்குப் பிறகு அந்த முயற்சியைக் கைவிட்டார்கள். விசாரணைகளை உன்னிப் பாகக் கவனிக்கும்போது, புலனாய்வு அமைப்பு களின் செயல்பாடு தொடர்ந்து பரிதாபமாக இருப்பதையும் மும்பை உயர் நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியது.

பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ்,  நரேந்திர தபோல்கர் ஆகியோரின் கொலைகளில் பொதுவான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், 40 முக்கிய அறிவுஜீவிகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். 

பன்சாரே வழக்கில், கொலையாளிகள் விரைந்து நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.