headlines

img

பெரும் குரல் எழுப்புவீர்!

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக 138 நாட்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தேர்தல் முடிந்தவுடன் திரும்பவும் பெட்ரோல் விலைகள் தாறுமாறாக ஏற ஆரம்பித்துவிட்டன. 12 நாட்களில் 10 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாங்கள் தலை யிடுவதில்லை, சந்தையின் விதிகளுக்கு விட்டு  விட்டோம், எண்ணெய் வணிக நிறுவனங் களின் சுதந்திரம் அது என்றெல்லாம் ஆட்சி யாளர்கள் கூறி வந்தார்கள். ஆனால் தேர்தல்  என்றால் பிரேக் விழுவதும், அதற்கு பிறகு ஆக்ஸிலேட்டரை எக்குத் தப்பாக அழுத்து வதும் ஆட்சியாளர்களின் கூற்றுக்களை ‘‘அப்பட்ட மான பொய்கள்’’ என்று நிரூபித்து விட்டன. 

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100, டீசல் விலை ரூ.92, சமையல் கேஸ் விலை சிலிண்ட ருக்கு ரூ.50 உயர்ந்து சிலிண்டர் விலை ரூ.950 ஆகியுள்ளது.  

2014 இல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை  ரூ.71, டீசல் விலை ரூ.57 என்று இருந்தது. அப்போ தெல்லாம் டீசல் விலைகள் பெட்ரோலை விடக் குறைவாக இருந்ததால் பலர்  டீசல் வண்டி களை நாடுவார்கள். இப்போது அப்படி தப்பிக்கிற வழியையும் அடைத்து விட்டார்கள். இரண்டி ற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 

என்ன காரணம்? சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வா? சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்த போதும் இங்கு  விலை குறைக்கப்பட்டதா? இல்லையே. அப்போது என்ன செய்தார்கள்? எக்சைஸ் (கலால்) வரிகளை அதிகரித்தார்கள். ஆனால் அங்கு விலை கூடினால் மட்டும் இங்கு விலை  உடனே கூடி விடும். சந்தை விதிகளும் சாமானிய மக்கள் என்றால் திமிராக நிமிர்ந்து விடும். தனி யார் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் என்றால் வளைந்து கொடுக்கும். 

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு அனைத்து சரக்குகளின் விலைகளையும் ஏற்றிவிடும். இதனால்தான் மொத்த விலைக் குறியீட்டெண் 13 சதவீதத்தையும், நுகர்வோர் விலைக் குறி யீட்டெண் 6 சதவீதத்தையும் தொட்டிருக்கிறது. 

பெட்ரோல் டீசல் விலை உயர்வுகள் மாநில அரசுகளின் நிதியாதாரங்கள் மீதும் தாக்கு தலை தொடுக்கின்றன.  ஒன்றிய அரசின் பெட்ரோ லிய வரிகள் கூட மாநில அரசுகளுக்கு பங்கு கிடைக் காத வகையில் செஸ் மூலமாக போடப்படுகிறது. வரி வருவாயில் 42 சதவீதம் மாநில அரசு களுக்கு வர வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு ஒரு லிட்டருக்கு ரூ.33 வசூலித்தால் அதில் மாநில அரசுக்கு கிடைப்பது வெறும் ரூ.1.50 மட்டுமே.

இப்படி பெட்ரோலிய விலை உயர்வு சந்தை  அநீதியை நமக்கு வெளிச்சம் போட்டு காண்பிக் கிறது. ஒரு பக்கம் வருமான திரட்டலில் கார்ப்ப ரேட் வரிச் சலுகைகள், மறு பக்கம் சாமானிய மக்கள் மீது சுமை என வர்க்க பாரபட்சத்தின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது. மாநில அரசுகளுக்கும் பங்கு கொடுக்காமல் செஸ் விதிப்பின் மூலம் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கும் உலை வைக்கிறது. 

பெட்ரோல் நிலையத்தில் மீட்டர் ஓடும் போது முணு முணுக்கிற மக்கள் மனதில் இந்த கேள்விகளும் ஓட வேண்டும். முணு முணுப்பு ஒன்று திரளட்டும். பெரும் குரலாக எழட்டும்!