ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என்று தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றும் முன்னணி திரைக் கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊட்டச்சத்துக்கான தேசிய சிந்தனையாளர்கள் குழு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அமீர் கான், ஆலியாபட், கத்ரினா கைஃப், ரன்வீர் சிங், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட பிரபலங்களுக்கு இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள ஊட்டச்சத்து நிபுணர் கள், குழந்தை மருத்துவர்கள் கடிதம் ஒன்றை எழு தியுள்ளனர். குறிப்பாக அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்புச் சத்து கொண்ட உணவு வகைகளை பிரபலப்படுத்தி தயாரிக்கப்படும் விளம்பரங்களில் நடிக்க வேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ள னர். இது போன்ற விளம்பரங்களில் நடிப்பதற்கு முன்பு சமச்சீரான உணவு குறித்த அரசின் வழிகாட்டுதல் களை ஒரு முறை படித்துப் பார்க்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 உட்பிரிவு 28, குழந்தைகளின் பாது காப்பை அச்சுறுத்தும் அல்லது சுகாதாரமற்ற உண வுப் பொருட்கள் குறித்து விளம்பரங்கள் தவறா னவை என்று வரையறை செய்துள்ளதை ஊட்டச் சத்து நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமீபத்தில் ஊட்டச்சத்து நிபுணர்கள் அடங்கிய அமைப்பு நடத்திய ஆய்வில் பல பிரபலங்கள் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை தங்களுக்கு தெரிந்தே பிரபலப்படுத்தும் விளம்பரங்களில் நடித்து வருவது தெரியவந்துள்ளது. அதிக கொழுப்பு, சர்க்கரை, அல்லது உப்பு மிகுந்த உணவுப் பொருட்கள் குழந் தைகளின் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. எனவே இத்தகைய விளம்பரங்கள் மீது கட்டுப் பாடுகள் விதிக்க வேண்டும் என்று பல ஆண்டுக ளாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும், இப்பொருட்க ளைத் தயாரிக்கும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்கள் கண்டு கொள்வதில்லை. இத்த கைய நிறுவனங்களின் ஆரோக்கியமற்ற தயாரிப்பு களுக்கு கடிவாளம் போடுவது அவசியம் என்பதைத் தான் ஊட்டச்சத்து நிபுணர்களின் வேண்டுகோள் வலியுறுத்துகிறது.
இத்தகைய உணவுப் பொருட்களால் குழந்தை கள் சிறு வயதிலேயே உடல் பருமன், சர்க்கரை பாதிப்பு, புற்றுநோய் மற்றும் இதர உடல் உபாதைக ளுக்கு ஆளாவதோடு, பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைவதும் அதனால் அவர்க ளுக்கு ஏற்படும் மனக்குழப்பங்களும் அதிகரித்து வருகிறது. எனவே ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் குறித்து பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் பணி மட்டுமல்ல. பெற்றோர்களுக் கும் பெரும் பொறுப்பு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கேழ்வரகு, சாமை குதிரைவாலி, கம்பு போன்ற சிறு தானியங்களின் முக்கியத்துவத்தை மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் எடுத்துரைத்து வருகின்றனர். சிறு தானியங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து, மெக்னீசியம், நியாசின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக் கள் இருக்கின்றன. இவை ரத்தத்தில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கின்றன. எனவே குழந்தைகளி டம் சிறு தானியங்களைப் பயன்படுத்தி தயாரிக்கும் உணவுப் பொருட்களை உண்ணப் பழக்குவதன் மூலம் ஆரோக்கியமான பாதைக்கு அவர்களை திருப்ப முடியும்.