கவிதைகள்
ஆண் பெண் இருபாலர்
பாலியல் வன்முறை
சாதி மதம் குருதி
இந்த உலகிலேயே அதிகம்
கவலை கொண்ட மனிதராக
கடவுளை மாற்றி விட்டீர்கள்
என்ன தான் நீங்களே படைத்தவரென்றாலும்
அவருக்கும் இதயமென்று ஒன்று இருக்குமில்லையா?
ஹிட்லர்களும் நாஜிக்களும்
சுல்தான்களும் செங்கிஸ்கான்களும்
காதைக்கொடுங்கள் அவர்களும் இவர்களும்
வாட்களும் வேட்களும் கொடியும் தோரணங்களும்
இராமபானம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா
ஏழேழு கடலைத்தாண்டி
ஏழேழு பனையைத்துளைத்து
பிறகு குறிபார்த்து
வாலிக்களை சாய்த்து
ஆனால் கூனிக்களிடம் தோற்று
அட சம்புகா உன்னைப்பற்றி
பிறிதொருமுறை பேசுகிறேன்
இப்பொழுது நம் தேவை
நம் கடவுளை கவலையற்ற மனிதராக்குவது தான்
குறைந்த பட்சம் ஒரு தலைபட்ச சார்பற்றவராக
என்ன தான் நாம் படைத்தவரென்றாலும்
வெளியே அனுப்பிய பிறகு
வீடு வந்து சேரும் வரை அவர் உலகம்
அவருடையது தானே?