headlines

img

தோழர்களின் சந்திப்பு

ஏகாதிபத்தியத்தின் முற்றுகைக்கு உள்ளாகி யுள்ள உலக அரங்கின் இரண்டு முக்கிய நாடுக ளது தலைவர்கள் ரஷ்யாவில் சந்தித்திருக்கி றார்கள். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் - கொரிய மக்கள் ஜனநாயக குடியரசின் ஜனாதி பதி கிம் ஜோங் உன் ஆகியோரது இந்த சந்திப்பு புவி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். 

ரஷ்யாவின் தூரக் கிழக்கு பிரதேசமான ஆமுரில் உள்ள வோஸ்டாச்னி விண்வெளி ஏவு தளத்தில் நடந்த இந்த சந்திப்புக்காக வடகொரிய தலைநகர் பியாங்கியாங்கில் கிம் ஜோங் உன் ரயில் ஏறிய தருணம் முதல் கடந்த மூன்று நாட்களாக மேற்கத்திய ஊடகங்கள் புடினையும், கிம்மையும் உலகின் எதிரிகளாகவும், பெரும் அழிவை தரக்கூடிய பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து ஆத்திரத்தை கொட்டித் தீர்த்து விட்டன என்றால் மிகையல்ல.

இரண்டு நாடுகளும் அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளால் கடுமை யான பொருளாதார மற்றும் அரசியல் தடை களை எதிர்கொண்டிருக்கிற நாடுகள். இத்தடை கள் காரணமாகவே, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உலகின் எந்த நாட்டுக்கும் செல்ல முடியாது என்ற நிலை உள்ளது. தற்போது, அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட உக்ரைன் போரை காரணம் காட்டி உலகின் மிகப் பெரிய நாட்டின் ஜனாதிபதியான விளாடிமிர் புடினும் எந்த நாட்டிற்கும் செல்லமுடியாது என்ற தடை யை ஏகாதிபத்திய அரசுகள் விதித்துள்ளன. அதனால் தான் தென்னாப்பிரிக்காவில் நடை ெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்கும் இந்தியாவில் நடை பெற்ற ஜி-20 மாநாட்டிற்கும் புடின் வர இயல வில்லை.

இந்த பின்னணியில், தடைகளுக்கு உள் ளான இரண்டு நாடுகளின் தலைவர்கள்  தங்க ளது எல்லையில் சந்தித்திருப்பது, அந்தத் தடை களை உடைப்போம் என்ற செய்தியை ஏகாதி த்திய சக்திகளுக்கு அளித்துள்ளது. 

அதே வேளையில், இந்த இருவரின் சந்திப்பும் மேற்கத்திய ஊடகங்கள் கூறியது போல உலகை அச்சுறுத்துவதற்காக அல்ல; இருதரப்பு அர சியல், பொருளாதார, கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்காகவே என்று, ஐந்து மணி நேர சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளனர். 

சோசலிச வடகொரியா உதயமானதன் 75ஆம் ஆண்டில் புடினுடன் நடந்த இந்த சந்திப்பு பற்றி அந்நாட்டு அரசு பெருமிதத்துடன் குறிப்பிடு கிறது, உலகில் முதன்முதலில் சோசலிச வட கொரியாவை அங்கீகரித்த நாடு சோவியத் ஒன்றியம்தான் என்று. இத்தனை ஆண்டுகளும் ஒரு நிமிடம் கூட இடைவிடாமல் ஏகாதி பத்தியத்தால் முற்றுகையிடப்பட்டுள்ள வட கொரியாவுக்கு அரசியல் ரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும், அறிவியல் தொழில்நுட்பத் த்துறையிலும் நிரந்தர தோழனாக நிற்கிறது ரஷ்யா. இந்த தோழமைதான் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் பிரச்சனை.