headlines

img

விடுதலைப் போற்றி எழுக இந்தியா!

இந்தியத் திருநாடு 77 ஆவது விடுதலைத் திருநாளை கொண்டாடும் இந்த இனிய பொழு தில் அனைவருக்கும் விடுதலைத் திருநாள் நல் வாழ்த்துக்களை தீக்கதிர் தெரிவித்துக் கொள்கி றது. விடுதலைப் போரின் விழுமியங்களான ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை பாதுகாக்க இந்நாளில் சூளுரைப்போம்.

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத ஒரு இயக்கத்தினரின் கையில் ஒன்றிய ஆட்சி யதிகாரம் சிக்கியுள்ளது. நரேந்திர மோடி தலை மையிலான ஒன்றிய அரசு இந்தியத் திரு நாட்டை அனைத்து வகையிலும் சீரழித்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. இவர்களது ஆட்சியில் ஜனநாயகம் என்ன பாடு படுகிறது என்பதற்கு நடந்து முடிந்த நாடாளு மன்ற கூட்டத் தொடரே சாட்சியாகும்.

ஒரு பிரதமரை நாடாளுமன்றத்திற்கு வந்து பதிலளிக்கச் செய்வதற்கே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டியுள்ளது. அப் போதும்கூட அவர் மணிப்பூர் கொடூரம் குறித்து பதிலளிக்க மறுக்கிறார். அவருடைய சகபாடி களோ சம்பந்தா சம்பந்தாமில்லாமல் பேசி ஜன நாயகத்தை கேலிக்கூத்தாக்குகின்றனர்.

ஆர்எஸ்எஸ் எனும் பாசிச பாணி அமைப் பின் செயல்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவது, அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்வது போன்றவற்றை கச்சிதமாக நிறைவேற்றிய ஒன்றிய ஆட்சியா ளர்கள் அடுத்து பொது சிவில் சட்டத்தை நடை முறைப்படுத்தப் போவதாகக் கூறுகின்றனர்.

அந்நிய ஏகாதிபத்தியத்தின் அரசியல் பொரு ளாதார, பண்பாட்டுச் சுரண்டலை எதிர்த்து அனைத்துப் பகுதி இந்திய மக்களும் வீறு கொண்டு எழுந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர். நாடு சுதந்திரம் பெற்று 76 ஆண்டு கள் கடந்துள்ள நிலையில், ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்கு தேசத்தின் வளம் அனைத்தையும் கைமாற்றி விடும் வேலையைத்தான் ஆர்எஸ்எஸ் பாஜக பரிவாரம் செய்து வருகிறது.

தங்களுடைய நாசகர வேலையை தடை யின்றி தொடர்வதற்காகவும், மக்களுடைய கவ னத்தை திசைதிருப்புவதற்காகவும் நாடு முழுவ தும் சாதிமத பகைமைகளை இந்துத்துவா கூட்டம் தூண்டி விடுகிறது. சிறுபான்மை மற்றும் பட்டிய லின, பழங்குடியினர், பெண்கள், குழந்தைகள் என நலிந்த பிரிவினர் நசுக்கப்படுகின்றனர். இந்தியா என்ற பெயரே ஆட்சியாளர்களுக்கு இப்பொழுது எட்டிக்காயாய் கசக்கத் துவங்கி யுள்ளது. ஆனால் நம்பிக்கை தரும் விதத்தில் ‘இந்தியா’ கூட்டணி எழுந்து நிற்கிறது. அடுத்த விடுதலைத் திருநாள் கொண்டாடப்படும் போது மதவெறிக் கூட்டம் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதே இந்ந நாளுக்கான பொருத்தமான உறுதிமொழியாக இருக்க முடியும்.