headlines

img

குரூரமான காப்பகம்

ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் செயல்படும் பல காப்பகங்களில் முறைகேடுகளும் பாலியல் கொடுமைகளும் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது. தற்போது அந்த வரிசையில் விழுப்புரம் அருகே உள்ள குண்டல புலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமம் சேர்ந்துள்ளது. சலீம் கான் என்பவர் தனது மாமா ஜபருல்லாவை இந்த காப்பகத்தில் 2021 டிசம்பரில் சேர்த்திருந்தார். அமெரிக்கா சென்று திரும்பிய அவர், காப்ப கத்திற்குச் சென்று பார்க்கையில் அவரது மாமா அங்கு இல்லாததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை நடவடிக்கை எடுக்கா ததால்  உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து வேறு வழியின்றி காவல்துறை, வருவாய்த் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், காப்பகத்தில்  சோதனை நடத்திய போதுதான் அங்கு நடைபெற்று வரும் சித்ர வதைகளும் பாலியல் கொடுமைகளும் வெளி உலகத்திற்குத் தெரியவந்துள்ளது. 

தங்களுக்கு ஏற்பட்ட துயரத்தை வெளியே சொல்லக்கூட தெம்பு இல்லாத ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் சித்ரவதைக்கு ஆளாக் கப்பட்டுள்ளது கொடுமையானது. மேலும் ஆதர வற்ற, மாற்றுத்திறனாளி பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருப்பதும் அதிர்ச்சி யளிக்கிறது. இந்த சம்பவங்கள் வெளியே தெரியவந்த பிறகு வேகமாகச் செயல்படும் மாவட்ட நிர்வாகம் காப்பகத்தை அவ்வப்போது ஆய்வு செய்திருந்தால் பலரது உயிரைக் காப்பாற் றியிருக்கலாம், மேலும் காப்பகத்தில் இருக்க வேண்டிய 137 பேரில் 121 பேர் மட்டுமே தற்போது உள்ளனர்,  காணாமல் போன 16 பேரின் நிலை குறித்து தீவிரமாக விசாரிக்கவேண்டும். 

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் செயல் படும் காப்பகங்கள் தொடர்பாக கடந்த காலங்க ளில் புகார்கள் வந்தபோது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் நீதிமன்றத்தில் வலுவாக வாதாடத் தவறியதால் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பித்துள்ளனர். இந்த காப்பகம்  குறித்த செய்திகள் வந்த பின்னர் காவல்துறையினர் காப்பக நிர்வாகி அன்பு ஜூபின் பேபி , அவரது மனைவி மரியா ஜூபின், காப்பக பணியாளர்கள் உள்பட 9 பேர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்திருப்பது வரவேற்கத் தக்கது.  

அனுமதியின்றி காப்பகம் நடத்தி வந்தது, ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் களை பாலியல் வன்கொடுமை செய்தது, அடித்துத் துன்புறுத்தியது, ஆசிரமத்தில் இருந்தவர்க ளை வியாபார உள்நோக்கத்துடன் வெளிமாநி லத்திற்கு கடத்தியது தொடர்பாகவும் விரிவாக விசாரிக்க வேண்டும்.  விரைவு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றி குற்றவாளிகள் யாரும் தப்பிக்காத வகையில் நேர்மையாக விசாரணை நடைபெறவேண்டும். காவல்துறையினர் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல்  செய்வ தோடு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வகையில் செயல்படவேண்டும்.