பேட்மிண்டன் உலகின் மிக முக்கிய தொடர்களில் ஒன்றான ஜப்பான் ஓபனின் 41-வது சீசன் ஒசாகா நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வெல்வார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் பிரணோய் வெள்ளியன்று நடைபெற்ற தனது காலிறுதி ஆட்டத்தில், தைவானின் டியன் செனனிடம் 17-21, 21-15, 20-22 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி அரையிறுதி வாய்ப்பை இழந்தார். ஜப்பான் பேட்மிண்டன் தொடரில் விளையாடி வந்த கடைசி இந்தியரும் (பிரணோய்) வெளி யேறியதால் இந்திய பேட்மிண்டன் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.