“பாரம்பரியம், கலாச்சார த்தை காப்பாற்ற வேண்டும் என பெண்கள் விளையாடுவதை தடுத்து வந்த சமூகமும், பெற்றோ ரும் தற்போது ஆதரிக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம், பெண் களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வும் கராத்தே, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, கிக் பாக்ஸிங் போன்ற தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்கின்றனர். அதிலும் பல்வேறு சிரமங்களை தாண்டித்தான் தொழில்முறை வீராங்கனைகளாக பலரும் சாத னை நிகழ்த்தி வருகின்றனர். அவர் களில் ஒருவர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரேவதி’’.
ஓட்டுநர் மகள்...
பெரம்பூரிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து வருபவர் 12 ஆம் வகுப்பு மாணவி பி.ரேவதி. இவரது தந்தை பிரகாஷ் மினி லாரி ஓட்டுநர். நாட்டைக் காக்கும் போர் வீரர்கள் குடும்பத்தில் பிறந்தவர் அம்மா அனிதா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். சிறு வயது முதல் மூத்த மகள் ரேவதிக்கு விளையாட்டில் ஆர்வம். சக மாணவிகளுடன் தட களப் போட்டிகளில் விளையாடி வந்திருக்கிறார். அவரது உற வினர் ஒருவர் ‘கிக் பாக்ஸிங்’ பயிற்சி எடுத்திருக்கிறார். அதை பார்த்ததும் தானும் அது போன்று வர வேண்டும் என்ற விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
தொழில் மட்டுமல்ல அது
‘கிக் பாக்ஸிங்’ என்பது முழங் கால்களால் உதைத்தல், கைகளால் குத்துவதை அடிப்படையாகக் கொண்ட போர் விளையாட்டு களின் ஒருவகை தற்காப்புக் கலையாகும். இது 1970-களில் இருந்து பிரபலமடைந்து வரு கின்றது. கராத்தே, குத்துச் சண்டை கலந்திருந்தாலும் தொழில் முறை விளையாட்டாகவும் மாறிஉள்ளது. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த கிக் பாக்ஸிங் விளை யாட்டில் கால் நூற்றாண்டுக்கு முன்பு தான் பெண்கள் கால் பதித்தனர். இது போன்ற தற்காப்பு கலையை பெண்கள் கற்றுக் கொண்டால் அதுவே துணையாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது. கிக் பாக்ஸிங் தற்காப்பு கலை யில் பயிற்சியில் சேர்ந்த ரேவதி, சில ஆண்டுகளிலேயே உள்ளூர் போட்டிகளில் களம் இறங்கி வெற்றி வாகை சூடியதால் மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கம் வென்று அசத்தினார்.
‘‘கோல்ட் மெடல்’’
இதன் தொடர்ச்சியாக சென்னை, மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங் கேற்று தேசிய அளவிலும் முத லிடம் பிடித்து தமிழகத்திற்கு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்தார். அண்மையில் தாய்லாந்து சென்று உலகின் முன்னணி நாடுகளான ரஷ்யா, கம்போடியா வீராங்கனைகளை தோற்கடித்து சாம்பியன் மற்றும் தங்கப் பதக்கத் திற்கான இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை அந்நாட்டு ரசிகர்கள் முன்னிலை யில் மூன்றே நிமிடங்களில் ‘நாக்- அவுட்’ செய்தார். இந்த வெற்றி யின் மூலம் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும் வென்று இந்தியா வுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அவ்வளவும் எளிதல்ல!
அரசுப் பள்ளியில் படித்து வரும் ரேவதி விளையாட்டில் மட்டுமல்ல படிப்பிலும் கெட்டிக்காரர். அதனால் ரேவதிக்கு சிறப்பு பாடம் எடுக்கிறார்கள். தேர்வு நடத்து கிறார்கள். மாணவப் பருவம் என்பதால் வெளிநாட்டு வீரர்களு டன் விளையாடுவதற்கு தேவை யான சிறப்பு பயிற்சிக்கும் போட்டி களுக்கு வெளிநாடுகள் சென்று வரவும் போதிய நிதி உதவி கிடைக்காத நிலையில், அவரது வெற்றியும் அவ்வளவு எளிதில் கிடைத்திடவில்லை. ரேவதியின் வெற்றிகளுக்கு பயிற்சியாளர்கள் லோகேஷ், நவீன், அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஸ்வரி ஆசிரியர் கள் கிரிஜா, செல்வகுமாரி, சக மாணவர்கள் தொடர்ந்து உறு துணையாக இருந்து வருகின்ற னர். சமூக மாற்றத்திற்கான இயக் கத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மினி லாரி ஓட்டி வரும் பிரகாஷின் குறைந்த வருமானம் தான் ரேவதியை சாதனை நாயகி யாக மாற்றி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பிரகா ஷின் நண்பர்களும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
ஸ்பான்சர் தேவை
இந்த ஆண்டின் இறுதியில் கம் போடியா நாட்டில் நடைபெறும் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவிருக்கும் ரேவதியை சந்தித்தோம். ‘‘சர்வ தேச போட்டிகளில் வெளிநாட்டு வீராங்கனைகளின் பலத்தை எதிர் கொள்வதற்கான வழிமுறைகள், எனது திறமையை அதிகரிப்ப தற்கான சிறப்பு பயிற்சியை எடுத்து வருகிறேன். இந்த பயிற்சிக்கும் போட்டிக்கும் சென்று வரு வதற்கு தனியார் மற்றும் அரசு நிறு வனங்கள் ‘ஸ்பான்சர்’ செய்ய முன் வந்தால் இலக்கை எளிதில் அடைந்து நாட்டுக்காக பதக்கம் குவிக்க முடியும்’’ என்றுகூறினார்.
காயங்கள் என்பது சர்வசாதாரணம்
விளையாட்டுத் துறையிலும் காயங்கள் என்பது சர்வசாதா ரணம். குத்துச்சண்டை, கிக் பாக்ஸிங் போன்ற விளை யாட்டில் எதிரிகளிடம் அடி வாங்கி னால் ரத்தம் சொட்டும். அந்த ரத்தத்தையும், வலியும் தாங்கிக் கொண்டு தைரியம்-தன்னம்பிக்கை யுடன் எதிர் கொண்டால் மட்டுமே சாதனையாளராக மாற முடியும். நான் முதன் முதலாக கிக் பாக்ஸிங் களத்தில் இறங்கிய போது நடுக்கம் இருந்தது. பயிற்சியாளர் வழிகாட்டுதல், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண் டேன். பிறகு வெற்றி தன் வசமா னது என்று பெருமிதம் கொள் கிறார் ரேவதி.
கனவு
மிகக்குறுகிய காலத்தில் 6 தங்கப்பதக்கமும் இரண்டு வெள்ளி பதக்கமும் வென்று அசத்தி வரும் ரேவதி, சீனியர் போட்டிகளிலும் இந்தியாவுக்கு பதக்கம் வெல்ல வேண்டும். ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளை யாட்டு போட்டிகள், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு ‘தங்கப்பதக்கம்’ வெல்ல வேண்டும் என்பது அவரது கனவாகும்.
சிபிஎம் ஊக்கம்
தன்னால் நிச்சயம் சாதித்துக் காட்ட முடியும் என் என்று நம்பிக்கை யுடன் பயிற்சி மேற்கொண்டு வரும் அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களும் பிரகாஷின் நண்பர்களும் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகின்றனர். தாய்லாந்தில் தங்கம் வென்று தாயகம் திரும்பிய ரேவதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் பகுதி செயலாளர் விஜய குமார் தலைமையில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்க தோழர்களும், சிஐடியு எல்ஐசி, அமைப்பு சாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகளும் பாராட்டு தெரிவித்தனர்.
- ஸ்ரீராமுலு