22-வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரான பிர்மிங்ஹாமில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடருக்காக வீரர் - வீராங்கனைகள் தீவிர பயிற்சியுடன் இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல தயாராகி வரும் நிலையில், இந்திய தடகள அணியில் இருந்து தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளார்.
100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்ட பிரிவில் இடம் பெற்றிருந்த தனலட்சுமி ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த தால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதே போல கர்நாடகாவைச் சேர்ந்த மும்முறை தாண்டுதல் வீராங்கனை ஐஸ்வர்யா பாபுவும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் நீக்கப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎல்
இன்றைய ஆட்டம்
சேலம் - திருச்சி
இடம் : சேலம், நேரம் : இரவு 7:15
உலக தடகள சாம்பியன்ஷிப் பதக்கப்பட்டியலில் இடம்பிடிக்க முடியாமல் திணறும் இந்தியா
மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றான உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 18-வது சீசன் அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நட்சத்திரங்கள் தான் பங்கேற்ற பெரும்பாலான பிரிவுகளில் இறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினாலும் பதக்க பிரிவில் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறி சொதப்பி வருகின்றனர். விளையாட்டு உலகில் முக்கிய நாடாக இந்தியா இருந்தாலும் வீரர் - வீராங்கனைகளின் சொதப்பலால் இன்னும் பதக்கப்பட்டியலில் இடம்பிடிக்க முடியாமல் திணறி வருகிறது.
எல்லாம் தலைகீழ்
பொதுவாக தடகள தொடரில் நடைபெறும் வழக்கமான நிகழ்வுகளைப் போன்று இல்லாமல் ஒரேகான் தொடரில் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. தடகளத்தில் ஆதிக்கம் செலுத்தும் சீனா, ஜெர்மனி, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் எல்லாம் பதக்கங்களை குவிக்க முடியாமல் ஒன்றிரண்டு பதக்கங்கள் மட்டும் வென்று திணறி வருகிறது. போட்டியை நடத்தும் அமெரிக்கா மட்டுமே எப்பொழுதும் போல உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் பதக்கங்களை குவித்து வருகிறது. ஓட்டப்பந்தயத்தில் திறன் மிகுந்த ஆப்பிரிக்க நாடுகள் எவ்வித மாறுபாடின்றி வழக்கம் போல பதக்கங்களை அள்ளி வருகின்றனர்.