games

img

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரபேல் நடால், கிர்கியோஸ்  

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டியில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், அமெரிக்காவின் டெய்லர் பிட்சுடன் மோதினார்.  

இந்த போட்டியில் முதல் மற்றும் 3வது செட்டை டெய்லரும், 2வது மற்றும் 4வது செட்டை நடாலும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை நடால் வென்றார். இறுதியில் 3-6, 7-5, 3-6, 7.5, 7-6(10-4) என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  

மற்றொரு காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ், சிலியின் காரினுடன் மோதினார். இதில் 6-4, 6-3, 7-6 என்ற நேர் கணக்கில் கிர்கியோஸ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  

நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் கிர்கியோஸ், ரபேல் முன்னணி வீரரான ரபேல் நடாலை எதிர்கொள்கிறார்.  

இதுவரை நடால் மற்றும் ஜோகோவிச் 59 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் ஜோகோவிச் 30 முறையும், நடால் 29 முறையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;