games

img

விளையாட்டு...

இத்தாலி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் சிட்சிபாஸ்

ஐரோப்பா கண்டத்தின் முக்கிய டென்னிஸ் தொடரான இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது நடுகட்டத்தை தாண்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் 5-ஆம் நிலை வீரரும், கிரீஸ் நட்சத்திரமுமான சிட்சிபாஸ்,  தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள லோரோரென்சோவை 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.  மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள குரோசியாவின் கோரிச், தரவரிசை யில் இல்லாத ஹங்கேரியின் பபியான் மரோஜ்சனை 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். பபியான் மரோஜ்சன் தனது 3-வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரும், ஸ்பெயின் நட்சத்திரமுமான அல்காரஸை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2023

கிரிக்கெட் மைதானத்தில் நாய் கடி
வரலாற்றில் முதல்முறை : ஐபிஎல் உலகில் கலகல சம்பவம்

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜுன் தெண்டுல்கர் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். 4 போட்டி களில் விளையாடியுள்ள அர்ஜுன் தெண்டுல்கர் (23) ஓரளவு ஆட்டத் திறனை மேம்படுத்தி வரும் நிலையில், பயிற்சியின் பொழுது அர்ஜுன் தெண்டுல்கரை நாய் கடித்துள்ளது. அவர் எந்த மைதானத்தில் கடி வாங்கி னார் என்று தெரியவில்லை. ஆனால் பயிற்சிக்காக லக்னோவிற்கு சென்ற பின்புதான் இந்த விஷயம் வெளியே கசிந்துள்ளது. நாய் கடியால் பந்து வீச முடியாத அளவுக்கு அர்ஜுன் தெண்டுல்கர் பாதிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றில் முதல்முறை

கிரிக்கெட், கால்பந்து என அனைத்து மைதானங்களிலும் நாய், பூனை, பாம்பு நுழைவது சகஜமான விஷயம்தான் என்றாலும், இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகர கிரிக்கெட் மைதானங்களில் நாய் நுழை வது சாதாரண விஷயமாக உள்ளது. ரசிகர்கள் சாப்பிடும் ஸ்னாக்ஸ் வாச னையால் தெருநாய்கள் மைதானங் களுக்குள் நுழையும். பெரும்பாலும் கேலரியின் அடிப்பகுதியில் சுற்று திரியும் நாய்கள் பாதுகாப்பு குறைபாடுகளால் பிட்ச் பகுதியில் புகுந்து தனி ஆட்டம் ஆடிய நகைச்சுவை  வரலாறு உள்ளது. வீரர் - வீராங்கனை கள் தொந்தரவு செய்யாமல் இருந்தால், எப்படி வந்ததோ, வந்தது போலவே சமத்து பிள்ளையாக நாய், பூனை, பாம்புகள் சென்றுவிடும். இதுவரை  யாரையும் கடித்த வரலாறு கிடையாது.  ஆனால் அர்ஜுன் தெண்டுல்கர் மைதானத்தில் நாயிடம் கடி வாங்கி யுள்ளார். ஒருவேளை வயதிற்கு தகுந்த சேட்டையால் கடி வாங்கி இருக்கலாம். அர்ஜுன் தெண்டுல்கரை நாய் கடித்தது ஐபிஎல் உலகில் கடும் சிரிப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது. நாயிடம் கடி வாங்கும் அளவிற்கு என்ன சேட்டை செய்தார் என நகைச்சுவை மீம்ஸ்கள் முகநூல், டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இன்றைய ஆட்டம்
பெங்களூரு - ஹைதராபாத்
இடம் : ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (தொலைக்காட்சி), ஜியோ சினிமா (ஒடிடி) 

இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லையெனில்  ஐபிஎல் சீசனில் வெளியேறும். ஹைதராபாத் அணி ஏற்கெனவே வெளியேறிவிட்டதால்  அந்த அணிக்கு இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயம்தான்.