அமெரிக்காவின் கலிபோ ர்னியா நகரில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டி களில் முக்கிய தொடரான இந்தியன் வேல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் திங்களன்று நடைபெற்றது. நடப்பாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ஸ்பெயி னின் நடால் - அமெரிக்காவின் பிரிட்ஜ் ஆகியோர் கோப்பைக்கு பலப்பரீட்சை நடத்தினர். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அமெரிக்காவின் பிரிட்ஜ் 6-3, 7-6 (7-5) என்ற கணக்கில் நடாலை வீழ்த்தி சர்வதேச போட்டிகளில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்வியாடெக்கிற்கு கோப்பை
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போலந்தின் ஸ்வியாடெக், கிரீஸின் சக்கரியை 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பந்தாடி சாம்பியன் பட்டம் வென்றார். பட்டம் வென்ற ஸ்வியாடெக் 2020-ஆம் ஆண்டின் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரை கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.