சென்னை, ஜன. 29- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஐசிஎப் வீரர் ஒற்றையர் கோப்பை வென்றுள்ளார். ஐசிஎப்-பில் கணக்காளராக பணியாற்றும் பிரித்வி சேகர், காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குன்றியோர் பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டமும், இரட்டையர் பிரிவில் 2ஆவது இடமும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இதற்கு முன்பு பிரேசிலில் நடைபெற்ற காது கேளா தோர் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் இரட்டை யர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஒற்றையர் பிரிவு மற்றும் ஆடவர் பெண்டிர் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். உலக ரயில்வே சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய ரயில்வே அணியில் உறுப்பினராகவும் பங்கு பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு ஐசிஎப் பொதுமேலாளர் பி.ஜி.மால்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.