ஆஸ்திரேலியா ஓபன் தொடரிலிருந்து விலகினார் டொமினிக் தீம்
ஆஸ்திரியா, டிச.28-
டென்னிஸ் உலகின் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் தொடரிலிருந்து ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் டொமினிக் தீம் தொடரிலிருந்து விலகி உள்ளார்.
டென்னிஸ் உலகின் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றாக ஆஸ்திரேலியா ஓபன் தொடர் உள்ளது. இந்த தொடர் 2002 ஆம் ஆண்டு ஜன.17 ஆம் தேதியன்று முதல் ஜன.30 ஆம் தேதியன்று வரை ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக ஆஸ்திரியா நாட்டின் டென்னிஸ் வீரர் டொமினிக் தீம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டொமினிக் தீம் கூறியதாவது, நான் துபாயில் பயிற்சியை முடித்துவிட்டு நாடு திரும்பி உள்ளேன். இந்த பயிற்சியில் சில பின்னடைவுகள் இருந்தது.
மணிக்கட்டில் எனக்கு ஏற்பட்டிருந்த சிக்கல் சரியாகி உள்ளது. இயல்பாக பயிற்சி செய்து வருகிறேன். எதிர்வரும் கோர்டோபா ஓபன் தொடரில் பங்கேற்கும் விதமாக வரும் ஜனவரி மாதத்தின் இறுதியில் மீண்டும் பயிற்சிக்கு திரும்புவேன். அதனால், இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்திரேலியா ஓபன் தொடரை நான் மிஸ் செய்கிறேன். நான் அதிகம் நேசிக்கும் நகரத்தின் மக்களுக்கு மத்தியில் என்னால் விளையாட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசம். ஆனால், வரும் 2023 ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் நான் பங்கேற்பேன். இதனை நானும், எனது அணியும் சரியான முடிவாக பார்க்கிறோம், என்றார்.
28 வயதான டொமினிக் தீம், 2020 ஆஸ்திரேலிய ஓபன், 2018 மற்றும் 2019 பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும், 2020 அமெரிக்க ஓபன் தொடரில் ஒற்றையர் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.