games

img

நார்வே செஸ் 2022: 3ஆவது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி  

இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த், நார்வே செஸ் போட்டியில் 3ஆவது சுற்றில் தனது வெற்றியை பதிவு செய்தார்.  

நார்வே நாட்டின் ஸ்டாவஞ்சர் நகரில் கிளாசிக்கல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. முன்னணி வீரர்கள் 10 பேர் கலந்து கொண்டுள்ள இந்த தொடரின் முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவை வீழ்த்தினார். பின்னர் 2ஆவது சுற்றில் பர்கேரியாவின் வெசெலின் டோபலோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் 36ஆவது காய் நகர்த்தலின்போது வெற்றி பெற்றார்.  

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கிளாசிக்கல் பிரிவில் மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 39 நகர்வுகளுக்கு பிறகு வழக்கமான கிளாசிக்கல் போட்டி டிரா செய்யப்பட்ட பின்னர், இன்று விஸ்வநாதன் ஆனந்த் ஆர்மகெட்டனில் (சடன் டெத் கேம்) வென்றார்.

5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கிளாசிக்கல் பிரிவில் மூன்றாவது சுற்றில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

கிளாசிக்கல் கேம் டிராவில் முடிந்தால் இந்த நார்வே செஸ்ஸில் ஆர்மகெட்டன் என்ற அவசர, சடன் டெத் கேம் வைத்து வெற்றியாளர்களை முடிவு செய்வது வழக்கம்.