games

img

நார்வே செஸ் கார்ல்சனுக்கு மீண்டும் செக் வைத்த விஸ்வநாதன் ஆனந்த்

நார்வே நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் தொடரான “நார்வே செஸ்” விறுவிறுப்பாக நகர்ந்து வரும் நிலையில், கிளாசிக்கல் பிரிவில் உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து முன்னிலை பெற்றுள்ளார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.  இருவருக்கும் இடையிலான 5-வது சுற்று ஆட்டம் (40 நகர்த்தலில்) டிரா ஆனது. வெற்றியை நிர்ணயிக்க ஆர்மகெடன் முறையிலான சுற்றில் அதிரடியாக விளையாடி  கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த். இன்னும் 4 சுற்றுகள் மீதமுள்ள நிலையில் 10 புள்ளிகளுடன் முன்னிலையிலுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். 9.5 புள்ளிகளுடன் கார்ல்சன் 2-ஆம் இடத்தில் உள்ளார். இதே நார்வே செஸ் தொடரின் “பிளிட்ஸ்” பிரிவில் விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சனை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.