தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இன்று சர்வதேச செஸ் சம்மேளனத்தின் ரேட்டிங் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ், இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறியுள்ளார். இதன் மூலம் 37 ஆண்டுகளாக முதல் இடத்திலிருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை முறியடித்துள்ளார்.
உலக தரவரிசை பட்டியலில், குகேஷ் 2,758 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்திலும், விஸ்வநாதன் ஆனந்த் 2,754 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் உள்ளனர்.
1986-க்கு பிறகு உலகத் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை முந்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 17 வயதான குகேஷ், சென்னையைச் சேர்ந்தவர். 2019-இல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். 16 வயதில் உலக சாம்பியனை வீழ்த்தி சாதனை படைத்தார். மிக இளம் வயதில் 2750 லைவ் ரேட்டிங்கை எட்டிய வீரர் என்ற சாதனையை அண்மையில் படைத்தார்.
உலகக்கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா சர்வதேச தரவரிசை பட்டியலில் 19-ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.