games

img

உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை நிகாத் ஜரின் தங்கம் வென்றார்

உலக குத்துச்சண்டை சாமியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தாய்லாந்தின் ஜித்போங் ஜுதாமஸ்ஸை எதிர்கொண்டார். இதில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி நிகாத் ஜரீன் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.

இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்லும் 5-ஆவது வீராங்கனை என்ற பெருமையை ஜரீன் பெற்றுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவிற்கு முதல் தங்கம் இது என்பது குறிப்பிட த்தக்கது. முன்னதாக, கடந்த 2018-இல் மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் .

;